“ஒரு பெண்ணாக உன்மேல் நானும் பேராசை கொண்டேன்..
உன்னை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்...
எதற்காக உன்னை எதிர்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்.
இனி வேண்டாமே... நியானே..
இவன் பின்னாலே போவேனே..
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டே எழுத்து...”
இப்போது பெண்கள் இருவரும் காதலோடு பாடி முடித்தனர்... ஒவ்வரு பாடல் முடியும் போதும் அடுத்து என்ன பாட போகிறார்களோ என்று அனைவரும் ஆர்வமாக காத்திருக்க துவங்கினர்.
“இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே..
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே...
என் நாடியை சிலிர்க்க செய்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்..”
என் ஆண் கர்வம் மறந்தின்று உன்முன்னே பணிய வைத்தாய்... என்று அஸ்வத் பாடி முடிக்க, நிரு தொடர்ந்தான்.
“ஓ... எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்..
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்..
உன் நிழல் தரைப்படும் தூரம் நடந்தேன்...
அந்த நொடியை தான் கவிதையாய் வரைந்தேன்...”
ஆண்கள் இருவரும் தங்கள் காதலை முழுமையாய் காட்டிவிட நினைத்தனரோ என்னவோ மாற்றி மாற்றி காதல் பாடல்களாய் பாடினர்.
“மெதுவாகத்தான் மெதுவாகத்தான் எனை ஈர்கிறாய்
பழிவாங்கவா...
மெதுவாகத்தான் மெதுவாகத்தான் எனை ஈர்கிறாய்
பழிவாங்கவா...
மயிலாசன மருவிதழ் நானே...
மழை மேகமாய் இறங்கிவந்தேனே...
உன் விழி ஓரத்தில் விழுந்துவிட்டேனே நான்...”
என்று அவர்கள் பாடி ஆட, அடுத்த வரி அஸ்வத் நிருவிடம் இருந்து வந்தது...
“மெதுவாகத்தான் மெதுவாகத்தான் எனை ஈர்கிறாய்
எனை வாங்கவா..
அன்னம் மடவண்ணம் அழகை சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுதா மன்மதம் இவள் அழகு..
எட்டும் திசையெட்டும் தினம்கட்டும் பரிவட்டம்
இன்னும் சொல்ல மொழி இல்லையே...”
அனு, தேஜு தொடர்ந்தனர்..
“கொடி வேண்டுமா குடை வேண்டுமா...
உன்மடிபோல யாவும் சுகம் நல்குமா..”
அஸ்வத் நிரு...
“படை வேண்டுமா பகை வேண்டுமா...
உனை போல வீழ்த்த ஆளேது...
எனை வெல்ல யாரும் இல்லை..
உனை அன்றி திசைகள் வெல்லும் இசையே.....”
அவர்கள் பாடி முடிக்க, நிறைவு பாடல்களுக்காக தேடிக்கொண்டிருந்தனர்.. சட்டென அண்ணன் அண்ணிமார்கள் வந்து சேர்ந்தனர் குடும்பத்துடன்
“ஹே.. இடுச்ச பச்சருசி புடுச்ச மாவிளக்கு
அரச்ச சந்தனமும் மணக்க...
மதுர மல்லியப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ”
செவந்த குங்குமப்பூ மயக்க... என்று அம்மாக்களும் அண்ணிகளும் பாட.. அவர்களை தொடர்ந்து அண்ணன்களும் அப்பாக்களும் பாடினர்...
“தை மாசம் வந்திருச்சு.. கால நேரம் சேந்திருச்சு...
ஜோடி ஒன்னா ஆயிருச்சு.. மேல சத்தம் கேட்டிருச்சு...
மேகம் கருத்திருச்சு மாரி மழை பேஞ்சிருச்சு
மண்ணில் மனம் ஏறிருச்சு... மஞ்சள் நிறம் கூடிருச்சு...”
இவர்களை தொடர்ந்து அனு துவங்கினாள்...
“ஹே நெனச்ச கனவு ஒன்னு நெஜமா நடந்திருச்சே..
உன்னுட நான் சேருறது பளிச்சாச்சு..”
அவளை தொடர்ந்து அஸ்வத் பாடினான்...
“வெதச்ச விதையும் இங்க செடியா முளைச்சிருச்சு...
பூவும் இல்ல காயும் இல்ல கனிஞ்சாச்சு”
அவனை தொடர்ந்து தேஜு பாடினாள்...
“கல்யாண தேதி வந்து கண்ணோட ஒட்டிகிச்சு
என் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு”
அவளை தொடர்ந்து நிரு பாடி பாடலை நிறைவு செய்து வைத்தான்...
“ஏ...கண்டாங்கி சேலைகட்டி என் கைய நீ புடிச்சு...
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு...”
நிறைவான சங்கீத விழா நெஞ்சை விட்டு நீங்கா இசையாய் அமுதமாய் அரங்கேறி முடிந்தது. விழாவில் ஆட்டம் பாட்டும் கலை கட்டியதில் எல்லையில்லா மகிழ்ச்சி என்றால் உடம்பெல்லாம் அசதி தோன்றிவிட்டது அனைவருக்கும்... ஆனால் சோர்ந்து போக முடியாதே... மறுநாள் விடியல் இரு ஜோடிகளின் முக்கிய நாள் ஆயிற்றே. அலுத்து உறங்கும் மணமக்களுக்கு திருமணம் முடியும் வரை ஓய்வே இல்லை தான். கனவு காணும் அளவிற்கு கூட தெளிவில்லாம் தூங்கிபோயினர் நிம்மதியாக.
“ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி...
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி..
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி..
மஞ்சள் குங்குமம் மங்கை நீசூடி...
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி..
தென்றல் போல நீ ஆடடி...
மஞ்சள் குங்குமம் மங்கை நீசூடி...
தெய்வ பாசுரம் பாடடி...”