(Reading time: 25 - 49 minutes)

" ஹே பிரின்ஸ் என்ன இதெல்லாம் " - நித்யா

அன்பு ராஜ்ஜியம் ஒன்று

என் கைகளில் வந்தது இன்று

உன் ராஜாங்கம் செல்லாதம்மா….. ஓஹோ….

பாடலை சூர்யா தொடர்ந்து பாடினார்..

நெஞ்சில் சின்ன சின்ன ஆசைகள் கூடியது

 எங்கள் வீரத்திற்கு வாரிசு தோன்றியது

இந்த சொந்தம் என்றும் விலகாது ..ஓஹோ

இந்த பாட்டு பாடுற நேரத்திலே, சந்துல சிந்து பாடுற மாதிரி சில பேரு அவரவர் ஜோடிகளோடு காதல் நாடகம் பண்ணதையும் பார்ப்போம் .. முதல் ஜோடி .. வேற யாரு நம்ம மீரா- கிருஷ்ணாதான்... எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென மீராவின் கை பிடித்து இழுத்து தூணின் மறைவில் நின்றான் கிருஷ்ணன் ..   ( பாடல் தொடர்ந்தது .. )

சொல்லாத ஆசை ஒன்று

நெஞ்சுக்குள்ளே  இருக்கு

உன்னோடு வென்று அதை  முடிந்திடுவேன்

என்று பாடிகொண்டே அவள் இடையை கிள்ளினான் .. அவன் காதலி செல்லமாய் திருகியவள் பதிலுக்கு பாடினாள் ..

கண்ணா உன் குறும்புக்கு

வச்சிருக்கேன் கணக்கு

எப்போதும் உன்னை இங்கு தொடர்ந்திடுவேன்..

சட்டென புவனாவுடன் அங்கு வந்தான் சஞ்சய் ... சஞ்சய் கிருஷ்ணனின் கையை பிடித்துக் கொள்ள, புவனா மீராவின் கையை பிடித்து கொண்டாள் ..

அன்பு சொந்தம் இங்கு முத்துமணி மாலை ஆச்சு

சொத்து சுகம் அத்தனைக்கும் நான் ஆச்சு

அன்பினாலே துள்ளும் இல்லம் சொர்க்கம் போல் ஆச்சு

இந்த பூந்தென்றல் காற்று

இனி வீசும் என்னை பார்த்து

நான் ராஜாதி ராஜனம்மா ஓஹோ

அனைவரிடமும் டிமிக்கி கொடுத்து ஓடிக் கொண்டிருந்த மித்ரா, ஷக்தி மீது மோதி விட அவளை இடையோடு கரம் கொடுத்து பிடித்து நிறுத்தினான்...

" பார்த்து அம்மு " என்றவன் அவளை கீழிலிருந்து மேல் வரை பார்த்து விட்டு, " சும்மா சொல்ல கூடாது .. கண்டாங்கி சாரியில செம்ம அழகா இருக்க .. சமந்தாவே தோத்துட்டா " என்று சொல்லி அவள் கன்னம் தட்டிவிட்டு  சென்றான் .. அவனின் சின்ன ஸ்பரிசத்தில்  முகம் சிவந்து விட்டது அவளுக்கு .. பாடல் தொடர்ந்தது .. நம்ம பஞ்ச பாண்டவிஸ் எல்லாரும் அவளை சுற்றி நின்று கும்மி அடித்தனர் ..

இந்த ஜாதிமல்லி பூவு….

கன்னம்  செவந்திருக்கு….

காரணங்கள் யாரடியோ..

மச்சான் காரியத்தை பாரடியோ….

" ச்சி  போங்கடி" என்று வெட்கபட்டு ஓடினாள்  மித்ரா .. அனைவருக்கும் ஸ்வீட்  தரலாம் என்று ஜானகி சமையலறை போக அங்கு அவளுக்காக ஏற்கனவே காத்திருந்தான் ரகுராம் .. நித்யாவும் கார்த்தியின் கை பிடித்து இழுத்து பின்பக்கம் கிணற்றருகில் சென்றாள் ...

" நித்தி என்னடி ?"

" என்னடா .. ரொம்ப பிசியா .. என்னை கண்டுக்கவே மாட்டுற ? "

" ஹா ஹா . நான் கண்டுகிட்டா நீ தாங்குவியா ??"

" ச்ச்சி போ"

" ஹே எங்க ஓடலாம் பார்க்குற ?? "

" கையை விடு "

" மாட்டேன் " என்றவன் அவள் கையை இழுக்க பூமாலையாய் அவன் மீது சரிந்தாள்  நித்யா ..

அதே நேரம்

" ராம் "

" எஸ் "

" இங்கென்ன பண்ணுரிங்க ? "

" நீ என்ன பண்ணுற ? "

" நான் ஸ்வீட்  கொடுக்க வந்தேன் "

" நானும் ச்வீட் எடுத்துக்கத்தான் வந்தேன் " என்றபடி அவளை நெருங்கினான் ( பாடல் தொடர்ந்தது )

நான் போடும் வட்டத்திற்குள்

உன்னைச் சுற்றி வளைப்பேன்

வெளியே தாண்டிச் செல்ல முடியாது

அஹ் ஆஹா….

பூவினை போல உன்னை

மெல்ல மெல்ல பறிப்பேன்

வண்டுக்கு சட்டம் போட கூடாது

அந்த வெண்நிலவு தோளில் வந்து கைகள் போடும்

தென்றல் வந்து வாசல் எங்கும் பூ தூவும்…..

வானம் பூமி யாவும் எங்கள் தங்க தேரோடும்

இப்படியாய் ஒரு குட்டி பாட்டுல ஒரு அழகான காவியமே நடந்தேறியது ..!

அன்றிரவு,

ஜானகி, மீரா, சுபத்ரா மூவரின் கண்களை கட்டி கூட்டி சென்றனர் பெண்கள் அனைவரும் ..

" ஹே எங்க கூட்டிட்டு போறீங்க இந்த நைட் டைம் ல? " - மீரா

" ஹே நித்தி குரங்கு .. தாத்தா பாட்டி எல்லாரும் என்னை தேடுவாங்க விடுடீ " - நித்யா

" ஹே மது .. பயம்மா இருக்கு .. என்ன பண்ணுரிங்க ?? " - ஜானகி ..

" ஹா ஹா ஜானகி தேவி நீங்க எவ்ளோ பயத்துல அலறினாலும் உங்கள் ராமன் வர மாட்டாரு .. ஏன்னா அவருக்கு இப்போ அங்க அதே நிலைமைதான் .. " என்று வில்லத்தனமாய் சிரித்தாள்  மது ..

" அச்சோ காலு எல்லாம் சோர சொரான்னு என்னமோ இருக்கு நாம எதுமேல இருக்கோம் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.