" எதுக்கு மா ? "- நித்யா ...
" சந்தனம் மஞ்சள் தேச்சு , பன்னீரும் பூவும் கலந்த நீரில் குளிப்பாட்டி, நம்ம கல்யாண பொண்ணுகளை அலங்கரிக்கத்தான் " என்று சொல்லி இருவரையும் கொஞ்சினார் லக்ஷ்மி ..
இன்னொரு பக்கம்,
" தாத்தா ஐயர் வந்தாச்சா ?? "
" கார்த்தி, வந்தவங்க எல்லாரையும் கவனி"
" ஆகாஷ் இந்த தட்டை உள்ள கொண்டு போ "
" ஷக்தி, ஏதும் உதவி வேணுமாடா ? " என்று அனைவரும் ஏவி கொண்டு இருந்த அர்ஜுனன் ஓர் அறைக்குள் சென்றான் .. ..
" அஜ்ஜு "
" ஹே கண்மணி .. இங்க எப்படி வந்த நீ ?? நாம பார்த்துக்க கூடாதுன்னு சொன்னங்க தானே "
" ஹா ஹா நாளைன்னு சொன்னாங்களே .. அதான் விடிஞ்சிருச்சே.. உங்களை பார்க்க முடியாமல் ஓடோடி வந்துட்டேனே " என்று சிரித்தாள் சுபத்ரா...
ஒரு கையால் இதயத்தை வருடிக் கொண்டவன்
" ஐயோ அப்படி சிரிக்காதே டீ .,.. அர்ஜுன கண்ணியம் தவறிடுவான் போல " என்றான் குறும்பாய் ....
" அப்படியா ?? .... அப்படி என்ன பன்னிடுவிங்க ? " என்று அவனை நெருங்கி வந்தாள் சுபத்ரா ..
" உன்னை ..... " என்றவன் அவள் நெற்றியில் துள்ளி விளையாடிய கற்றை கூந்தலை ஒதுக்கி குறும்புடன பார்க்க, அவனை தள்ளி விட்டு ஓட நினைத்தாள் சுபத்ரா... ஆனால் அதற்குள் அவன் கைகள் அவளை சிறைபிடித்து விட்டது .
" அஜ்ஜு வேணாம் ... " என்று அவள் பேசும் நேரம் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது ..
( யார் அது ??? அடுத்து என்ன நடக்கும் ?? என்பதை அடுத்த எபிசோட்ல சொல்றேன் .. நம்ம ரகு கிருஷ்ணா கல்யாணத்தை இந்த எபிசோட்ல தரலாம் நெனச்சேன் .. பட் ரெண்டு ரீசன் காக தரலை .. ஒன்னாவது நம்ம மூடு ஜோடி கல்யாணமும் ஒரே எபிசொட்ல வைக்கணும் ஆசை..அடுத்தது , இந்த வருஷத்தின் கடைசி ஞாயிறு அடுத்த வாரம் தான் இல்லையா ? சோ நம்ம ஜோடிங்க அவங்க புது வாழ்க்கையை ஆரம்பிப்பதும், நாம பழைய வருஷத்தை முடிச்சு புது வருஷத்தை சேர்ந்து ஆரம்பிப்போம் என்ற எண்ணமும் தான் .. ஆக நம் ஜோடிகளின் திருமண வைபவத்தில் உங்களை சந்திக்கிறேன் ..நண்பர்களே _/\_ )
தொடரும்
{kunena_discuss:734}