(Reading time: 49 - 98 minutes)

 

ளாளுக்கு போய் உங்க கணவன்களை கூப்பிடுங்க பாப்போம்... எங்க கணவமார்கள்ளா இங்கேயே இருக்காங்க” என்று துளசி கிண்டல் செய்ய, இளம் ஜோடிகள் தேட சென்றனர். அவர்கள் பேசிக்கொண்டே வருவதை பார்த்ததும் நால்வரும் நான்கு பக்கம் சென்றுவிட்டனர்.

“அண்ணி எதுக்கு இப்போ நாலு பேரும் நாலு பக்கம் போறாங்க சரியா பாடலையே...”

“அதானே...”

“எதாவது பிளான் பண்ணிருப்பாங்கலோ...”

“சரி போய் கூட்டிட்டு வாங்க அவங்ககிட்டயே கேட்டுக்கலாம்.” போனவர்கள் சுத்தமாக சத்தமே இல்லை.. எல்லாம் மனைவியின் அழகில் மயங்கி வர்ணிக்க, மனைவிகள் எல்லாம் கணவனின் கொஞ்சலில் சினுங்கிகொண்டு இருந்தனர்.

அஸ்வத்தை தேடியவள் கோவிலுக்கு பின்புறம் அவன் நின்றிருக்க, அங்கே சென்றாள்... “இப்போ எதுக்கு இங்க வந்து நிக்குற? அங்கேயே இருந்தால் கூப்பிட வசதியா இருக்கும்ல?”

“ம்ம்ம்ம்... எல்லாம் அவங்க அவங்க பொண்டாட்டிய கொஞ்ச மறைவா ஒளிஞ்சிருக்காங்க, நான் மட்டும் அங்க இருந்த எல்லாருக்கும் தெரிஞ்சிரும் அதான் இங்க வந்தே... வா போகலாம் எப்படியும் நீ கொடுக்கவும் மாட்ட, வாங்கிக்கவும் மாட்ட” என்று புலம்பிக்கொண்டே அருகில் வந்தான். அவனது புலம்பலில் சிரிப்பு வர, “இப்போ நான் அப்படி சொல்லவே இல்லையே” என்று அவனுக்கு கேட்காது என்று வாய்க்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

ஆனால் அவள் கெட்ட நேரமோ அல்லது அவனது நல்ல நேரமோ அவனது காதில் அது கேட்டுவிட, சட்டென முகம் பிரகாசிக்க திரும்பினான்... “ஏய் இப்போ என்ன சொன்ன நீ?...”

“நானா? எது... எதுவும் சொல்லலையே...” என்று திணற, அவளிடம் நெருங்கினான் அஸ்வத். “டேய் கிட்ட வந்த காத்திடுவே...”

“ஆனால் நீ ஒரு வித்தியாசமான பொண்டாட்டி... என்னவோ rape பண்ண போற ரேஞ்சுக்கு சீன் போடுறியே அனு...” என்று பேசிக்கொண்டே முன்னேறினான். அவளும் பின்னோடு சென்று கொண்டிருந்து தென்னைமரத்தை ஒட்டிக்கொண்டுவிட, அவளிடம் நெருக்கமாக நின்றான். எப்போதும் போல் தடுக்கவும் இல்லை, தள்ளிவிடவும் இல்லை. அமைதியாய் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டாள். அவள் கண்கள் மூடியிருக்க அருகே இருந்தவன், ஒன்றுமே செய்யாமல் அவள் அருகே தென்னைமரத்தில் கை ஊன்றி அவளை பார்த்து மௌனமாக சிரித்துக்கொண்டிருந்தான். நொடிகள் கடந்து சென்றும் ஒன்றுமே நடவாதது உணர்ந்து கண் திறந்தவள், அவன் தன்னை பார்த்து சிரிப்பதை பார்த்து “ச்சே போடா...” என்று கைகளால் தள்ளிவிட்டு முன்னே சென்றாள். அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் “எனக்கு என்னவோ சந்தேகமாவே இருக்குடி... நீ கிட்டவந்தா எதுவுமே சொல்ல மாட்டிங்குற? ஆனால் சீன் மட்டும் போடுற...” என்று கிண்டல் செய்யவும் அவனை பார்த்து முறைத்துவிட்டு போனாள்.

அவள் வந்து சேருவதற்குள் அங்கு மற்ற தம்பதி எல்லாம் வந்துவிட, தோழி,அண்ணிகளின் கள்ள சிரிப்பே பதிலாக கிடைத்தது. எதுவும் கூறாமல் நிலம் பார்த்துக்கொண்டே வந்து அருகில் நின்றுக்கொண்டாள். அதன் பின் நேரம் பசுமையாக போக, அஸ்வத் பார்க்கும் போதெல்லாம் அனு முறைத்துக்கொண்டே இருந்தாள். இப்போ இவள் எதுவும் செய்யலைன்னு முறைக்குரளா? இல்லை செய்ய வந்ததுக்கு முறைக்குரளா? என்று புரியாமல் ஆனால் எப்போதும் போல் குறும்போடு பார்த்துக்கொண்டிருந்தான்.

னைவரும் வீடு வந்து சேர்ந்து உண்டு பேசி படுக்கவே சரியாக இருந்தது. அதுவும் அனைவரும் கூடி இருக்கும் நேரம் காலை நேர பனியை போன்று சில்லென்று இருக்க, அதை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து நகர்த்தினர். இரவு உறவுகளோடு அனு படுத்திருக்க, தண்ணி அருந்த வெளியே வந்தவன், அவள் படுத்திருக்கும் அறையை பார்த்தான், இரு குட்டிசுக்கும் நடுவில் படுத்திருந்தாள். கண்களை மூடி அவள் தூங்குவதை பார்க்க, குழந்தைகளின் நடுவில் ஒரு குழந்தையாய் தெரிய மனதிலே அவளை கொஞ்சிவிட்டு சென்றான். திரும்பி வருகையில் மீண்டும் எட்டி பார்த்தான் ஆனால் அவள் இல்லை. “எங்க போயிருப்பாள்” என்று எண்ணிக்கொண்டே திரும்ப எதிர்புறம் இருந்த வரண்டாவில் அமர்ந்திருந்தாள்.

மெதுவாக அவள் அருகில் அமர, எந்த அதிர்ச்சியுமே காட்டிக்கொள்ளவில்லை அவள். அப்போ நம்ம வந்தது கூட அவளுக்கு தெரிஞ்சிருக்கு, அழுத்தக்காரி என்று நினைத்துக்கொண்டு நகர்ந்து அவள் அருகில் அமர்ந்தான். உடனே தள்ளி அமர்ந்தாள். மெல்ல சிரித்துவிட்டு, “ஏண்டி நடுராத்திரில பேய் மாதிரி ஒக்காந்திருக்க?”

“ம்ம்ம்ம்... ஒரு பேயை கட்டிருக்கேன்ல அதான்...”

“குட் பதில்...”

“நன்றி...” பேசியவாறு அருகில் வந்தான்... மீண்டும் நகர்ந்தவள் “பக்கத்தில் வந்த அடுச்சிடுவேன் போடா...”

“எதுக்குடி இப்போ ஓவரா சீன் போடுற...”

“நீ மூணு வர்ஷத்துல போடாத சீன்னா???”

“இன்னமும் நீ அதை மறக்கலையாடி?” என்று கொஞ்சம் குரல் சோர்ந்தே கேட்டான்... அவன் வருந்துவது புரிந்து “பின்ன, நான் 3 வர்ஷம் மிஸ் பண்ணின லவ் லைப் எப்படி திரும்பி வாழுரதாம்...” அவள் சிறுபிள்ளை போல பிடிவாதம் பிடிப்பதை பார்த்து அவனுக்கு சிரிப்பு தான் வந்தது... “அடியே உனக்கு அது தான் பிரச்சனையா? இப்பயும் நான் லவ் பண்றேண்டி...”

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நான் கல்யாணத்துக்கு முன்னாடி மிஸ் பண்ணின 3 வர்ஷ லவ் எனக்கு வேணும் அதுனால தான் இந்த தண்டனை...”

“தள்ளி இருந்து தான் உணரனும்னு இல்லடி...”

“கல்யாணத்துக்கு முன்னாடின்னு சொல்றேன்ல அப்போ எல்லை மீராம தானே இருந்திருப்ப அப்போ இப்படிதான் இருக்கணும்” என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள்.

“யாருடி உனக்கு இந்த மாதிரி யோசனையெல்லாம் தரது...”

“ஏன்??? நல்லா இருக்கா? நானே தான்...”

“சகிக்கலை...”

“ச்சே போடா...”

“அப்பறம் போயிடுவேண்டி...”

“போ எனக்கென்ன....” அவள் குழந்தைத்தனமாக பேசிக்கொண்டிருந்தாள். அவளது தண்டனைகளும் அதன் நிபந்தனைகளும் அவனுக்கு சிறுபிள்ளை தனமாக தோன்ற சிரித்துக்கொண்டே கன்னத்தில் முத்தம் தந்துவிட்டு அறைக்கு ஓடிவிட்டான்...

“சீக்கரம் தூங்குடி பொண்டாட்டி...” என்று கூறி அவன் சென்றுவிட, அதையும் மனதில் ரசித்தவண்ணம் அமர்ந்திருந்தாள் முகத்தில் காட்டிக்கொள்ளாமல்.

காரணம் புரியாத சண்டைக்கு அப்போது அர்த்தம் புரிந்துவிட, சந்தோஷமாக இருந்தது அஸ்வதிற்கு... அவனது மனநிலை மாற்றுவது போலேயே ஒரு அழைப்பு வந்தது.

“ஹலோ...”

...

“எஸ்...”

...

“தேங்க் யூ சோ மச்... ஐ வில் பி தேர் டுமாரோ” என்று கூறியவன் மனதில் சந்தோஷமும் சோகமும் ஒருசேர இருந்தது... சோர்ந்த முகத்தோடு எழுந்தவன். யாரிடமும் விஷயத்தை கூறாமல் நேரத்தை கடத்தினான். அவனுக்கு பரிமாறும் பொழுது அவன் அருகில் வந்தவள். “என்னாச்சு? ஏன் ரொம்ப டல்லா இருக்க” என்று வினவவும் மெல்லிய முறுவலை உதிர்தவன்.

“நம்ம கடைக்கு புது ஆர்டர் கிடச்சிருக்கு...”

“ஹே சூப்பர்... சொல்லவே இல்லை...”

“அத்தை மாமா கேட்டிங்களா?”

“என்னம்மா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.