" ஷக்தி, நீ என்கிட்ட ஏதாச்சும் சொல்ல வர்றியா தெரில டா .. ஆனா நான் உன்கிட்ட நிறைய சொல்ல வெச்சுருக்கேன் ... என் மனசு முழுக்க இருக்குற காதலை உன்கிட்ட சொல்லனும்டா .. ஆனா அதை ஒரே நாளில் சொல்ல முடியுமா ??? ம்ம்ம்ஹ்ம்ம்ம் வேணாம் ... நான் சொல்லி நீ புரிஞ்சுக்க வேணாம் .. பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கோ .. நான் என்னுடைய காதலை தினம் தினம் செயலிலேயே உணர்த்திடுறேன் .. உன்னை கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்கணும், சுவாசம் போல சுவாசிக்கணும், தீபாவளி மாதிரி உன்னை என் லைப் ல வெச்சு கொண்டாடனும் .... இப்போதைக்கு என் மைண்ட்ல ஒரே ஒரு பாட்டுதான் ஞாபகம் வருது ...
உன்னுள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம்; போதாது
என் காதல் எடை என்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ தானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே!
ஐ லவ் யு ஷக்தி ... இப்பவும் எப்பவும் .... வித் லவ் சங்கமித்ரா " என்று அவளது பெயரில் எஸ் என்ற எழுத்துக்கு மட்டும் இரு பக்கத்திலும் இதயம் வரைந்து இருந்தாள் .. என்னவோ அவனிடமே அனைத்தையும் சொல்லி விட்டது போல மனம் லேசாகிவிட அப்படியே உறங்கியும் போனாள் மித்ரா ...
அதே நேரம் மாடியில் ஷக்தி சொன்னதை கேட்டு வேகமாய் மாடியிலிருந்து இறங்கி ஓடினாள் வைஷ்ணவி ..
" அண்ணி ... அண்ணி " என்று அழைத்து கொண்டு முகில்மதியும் அவளை பின் தொடர்ந்தாள் .. முகத்தில் குழப்ப ரேகை பரவ என்ன பேசுவது என்று புரியாமல் இருந்தனர் ஷக்தியும் கதிரும் ...
" அண்ணா "
" ...... "
" அண்ணா ...."
" ம்ம்ம் ...ஆங் ... சொல்லு கதிர் "
" ஏன் இப்படி பேய் அறைஞ்ச மாதிரி இருக்கீங்க "
" டேய் ..இங்க என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியாதா ?"
" தெரியுது தான் .. பட் நீங்க உங்க மனசில் இருக்குறது என்னன்னு தெளிவா சொல்லியாச்சுல ..பிறகு என்ன "
" ஆனா வைஷ்ணவி ??"
Related Read: நெஞ்சமெல்லாம் காதல் - 17
" வைஷு விஷயம் நாம பொறுமையா ஹேண்டல் பண்ணிடலாம் .. உங்க மனசுல மித்ரா இருக்கான்னு தெரிஞ்ச பிறகும் உங்க மேல ஆசை படுவான்னு நீங்க நினைக்கிறிங்களா ?"
"ச்ச ச்ச அப்படி நினைக்கல டா.... ஆனா அப்படி அவளுக்கு என்மேல ஏதும் எண்ணம் வந்திருந்தா அதுக்கு நான்தானே காரணம் ? "
" கண்டிப்பா இல்லன்னு சொல்ல மாட்டேன் .. பட் எதுவா இருந்தாலும் நேரடியா சந்திக்கலாம்னு தான் சொல்லுறேன் .. முதலில் மித்ரா கிட்ட இத பத்தி பேசுங்க .. வைஷ்ணவி கிட்ட நான் கூட பேசி சரி பண்ணிடுவேன் "
" இல்ல கதிர் .. அது தப்பு .. நானே இத சரி பண்ணுறேன் " என்று பெருமூச்சு விட்டேன் ...
" அண்ணி ... அண்ணி நில்லுங்க ப்ளீஸ் "
" என்ன மதி ? ஏன் இப்படி சத்தம் போடுற ...அம்மா அப்பா எழுந்திடுவாங்க "
" சரி அண்ணி .. பட் நீங்க ஏன் பேசிகிட்டு இருக்கும்போதே கீழே வந்துட்டிங்க ?"
" எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு மதி .. "
" இந்த நேரத்துல அப்படி என்ன வேலை அண்ணி ?
"எல்லாத்தையும் உன்கிட்ட நான் இப்போ சொல்லனுமா " என்று பட்டென கேட்டாள் வைஷ்ணவி . .
" சாரி அண்ணி " என்றாள் முகில்மதி உள்ளே போன குரலில் ..
" ஐ எம் சாரி டூ .. நீ முதலில் வீட்டுக்கு போ .. ஷக்தி அத்தான் கதிர் அத்தான் ரெண்டு பேரையும் தூங்க சொல்லு .. பெரியவங்களை நாளைக்கு எழுப்பிக்கலாம் ..குட் நைட் " என்று சொல்லி அங்கிருந்து சென்றாள் வைஷ்ணவி .. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று யூகிக்க முடியாமல் இருந்தாள் முகில்மதி ...இங்கு அனைவரும் ஒரு வித குழப்பமான மனநிலையிலேயே அந்த இரவை கழிக்க, நம்ம மதி மற்றும் நிலா என்ன பண்றாங்க பார்ப்போம் வாங்க ...
தேன்நிலா அவனது வாய் மூடும்முன்னே, அவளது கரத்தை பிடித்து கொண்டவன், கை விடாமலே
" மாமா " என்று மனோவை அழைத்திருந்தான் ... பாட்டி மற்றும் பாக்கியம் இருவரும் நிதானமாய் இருப்பதை கவனித்து இருந்திருந்தாள் கூட தேன்நிலாவிற்கு உண்மை புரிந்திருக்கும் .. அவளோ மருந்திற்கும் வேறு பக்கம் திரும்பாமல் மதியழகனின் கைகளை இருக்கமாய் பிடித்து கொண்டு தன் தந்தையை பார்த்தாள் ... ( நிலா மேடம் நீங்க பயப்படுறிங்களா ? உலகமகா நடிப்புடா சாமி )
மனோவோ
" சொல்லுங்க மாப்பிள்ளை " என்றார் மகளை பார்த்து கொண்டே.. மாமா மாப்பிளை என்று இருவரும் பேசுவதை வைத்தே தேன்நிலாவிற்கு ஓரளவு தன்னை சுற்றி நடப்பது புரிந்தது .. மதியின் கையை விட்டுவிட்டு தந்தையை கட்டிக்கொண்டாள் அன்புமகள் ..
" அப்பா , மதி ரொம்ப நல்லவருப்பா ... எனக்கு அவரைத்தான் பிடிக்கும் .. உங்களுக்கும் பிடிச்சிருக்கு தானேப்பா .. நான் சரியாய் முடிவெடுப்பேன்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானேப்ப்பா ... நான் உங்க செல்ல பொண்ணு ..என் சந்தோசம் தானே உங்களுக்கு பெருசுப்பா .. " என்று சிறுபிள்ளை போல அவரிடம் பேசியவ;ளை அன்பாய் வருடித் தந்தார் மனோ ..
" போதும் டா பேபி .. மிச்சத்தை எல்லாம் மாப்பிளை ஏற்கனவே சொல்லிட்டாரு .. அதுவும் நான் உன்னை பெத்தவன் செல்லம் .. என் பொண்ணு முகத்தை பார்த்தே அவ என்ன நினைக்கிறான்னு சரியா சொல்லிடுவேன் .. மதி நம்ம வீட்டுக்கு முதல் தடவை வந்தபோதே உன் முகத்தை வெச்சே ஓரளவுக்கு எனக்கு எல்லாம் தெரிய வந்தது .. "
" அப்பா " என்று விழிவிரிய அழைத்தவளுக்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை ..
" ம்ம்ம் ஆமா பேபி .. மறுநாள் நீ ஹாஸ்பிட்டல் போனதும், மதி நம்மை காரை கொடுத்துட்டு போக வந்தாரு .. அப்போவே அவர் மனசில் இருக்குறதை எங்க ரெண்டு பேருகிட்டயும் சொன்னாரு ...எனக்கும் உங்க அம்மாவுக்கும் அவரை ரொம்ப புடிச்சிருக்கு நிலாம்மா .. மதியை தவிர யாராலும் உன்னை சந்தோஷமா வெச்சுக்க முடியாது .. "
தந்தையின் மார்பில் சாய்ந்தவாறு நின்றபடியே தன் தாயின் முகத்தை பார்த்தாள் தேன்நிலா .. பாக்கியமோ அவளது அருகில் வந்து நெற்றியில் முத்தமிட்டு தன் சம்மதத்தை உணர்த்தினார்...தாயிடம் ஆறுதலாய் புன்னகைத்தவள் பாட்டியை கழுத்தோடு கட்டிக்கொண்டு
" பாருங்க பாட்டி உங்க பேரன் என்னென்ன வேலை எல்லாம் பண்ணி வைக்கிறார்னு " என்றாள் காதலுடன் ..
" ஆமா நிலாம்மா .. இவன் ரொம்ப மோசம் .. நான் உனக்கு வேற நல்ல மாப்பிளை பார்க்குறேன் " என்றார் அம்மு பாட்டி
" அய்யயோ பாட்டி .. நான் உங்ககிட்ட சொல்லி அவருக்கு சும்மா லேசா ரெண்டு அடி கொடுக்க சொல்லலாம் பார்த்தா நீங்க அடி மடியிலேயே கை வைக்கிறிங்களே " என்றாள் நிலா சோகமாய் ..
" ஹா ஹா ... நீயாச்சு என் பேரனாச்சு .. என்னை விடுங்கம்மா " என்று பாட்டியும் எஸ்கேப் ஆகிவிட, நம்பியாரை போல கைகளை தேய்த்து கொண்டே மதியழகனை நெருங்கி வந்தாள் தேன்நிலா ...
" என்கிட்ட கண்ணாமூச்சி ஆடினவங்களுக்கு நானே தண்டனை தரேன் " என்றவள் யாருமே எதிர்பாராத வகையில் அவனது கன்னத்தில் தன் முட்டத்தை பதித்து விட்டு ஓடினாள் .. மதியகழனோ அவளது திடீர் இதழ் ஒற்றுதலில் அதிலும் பெரியவர்கள் முன்னே எதுவும் சொல்ல முடியாமல் முகம் சிவந்து நின்றான் .. மனோதான் அனைவரையும் இலகுவாக்கும் வாகையில்
" டைம் ஓடிகிட்டே இருக்கு சீக்கிரம் கேக் வெட்டலாம் வாங்க " என்றார் .. தூரத்தில் நின்று கொண்டு கண்சிமிட்டிய தேன்நிலாவை பார்த்து விரல் நீட்டி மிரட்டி சிரித்தான் மதியழகன் ..