ஆனாலும் அன்பு இல்லத்தில் கடவுள் மேல் பற்றை வளர்த்திருந்தனர். இந்த அளவிற்காவது ஓர் பாதுகாப்பிடம் அமைந்ததே என்று அவளுமே உணர்ந்துகொண்டாள். கலங்கலாய் தெரிந்த பெற்றோரின் உருவத்தை தேடுவதை விட உடன் இருந்தோரிடம் அன்பு காட்ட பழகியிருந்தாள். தங்களுக்கு விதிச்சது இதுதான் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டாள். சில குழந்தைகளுக்கு பெற்றோரே யார் என்று தெரியாமல் இருக்கையில் தான் தவறான வழியில் வந்தவளல்ல என்ற எண்ணமே ஒரு நிமிர்வைத் தந்தது. பெற்றோரை நினைத்து ஏங்காமல் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவருக்குச் செய்தாள்.
வெளியுலகம் பற்றிய அறிவுரை அடிக்கடி போதிக்கப்பட்டதால் அது மனதில் பதிந்தும் போயிற்று. என்னதான் ஏட்டளவில் படித்திருந்தாலும், மற்றவர்களின் வாயிலாக கேட்டறிந்தாலும் தானே பட்டு தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
் பிரிவால் வாடியவள். காதலும் அப்படித்தானே என்று எண்ணினாள்.
அதுவும் தூரிகா அன்புக்காக ஏங்குபவள். படிக்கும் போதே அதை உணர்ந்து கொண்டவள் சந்தியா. என்னதான் ஆரம்பக் காலங்களில் விரைத்துக்கொண்டு போனாலும் சந்தியா பேச ஆரம்பித்தவுடன் குழைந்து போனவள் அவள். கிடைத்த அன்பு மறுக்கப்பட்டால் என்னாவாள்?