(Reading time: 8 - 15 minutes)

 

நான் சொல்லுறேன் தாத்தா…” என்றான் மகத்...

“என்ன மகத் சொல்லுற?... நீ சொல்லுறீயா?... உனக்கு எப்படி தெரியும் அவன் எதுக்காக கடத்தினான்னு?...” என புரியாதவராய் சதாசிவம் கேட்க

விஜய்யோ கேள்விக்குறியுடன் மகத்தினைப் பார்த்தான்…

“தெரியும் தாத்தா… தெரிஞ்சிக்கிட்டேன்… எல்லாமே…. இப்பவாச்சும் தெரிஞ்சதேன்னு நான் சந்தோஷப்படுறேன் தாத்தா… சந்தோஷப்படுறேன்….” என மகத் சொல்லிக்கொண்டிருக்கும்போது,

“ஹாய்டா டாக்டர்…” என்றபடி பிரபு வந்தான்… வந்தவன் விஜய்யை அங்கே பார்த்ததும்

“டேய்… நீயும் இங்கதான் இருக்குறீயா?... சூப்பர்டா…. அதுக்குள்ள எனக்கு தெரியாம இரண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்க போலேயே…. சொல்லவே இல்ல…” என்றபடி பேசிக்கொண்டே சென்றவன்,

சதாசிவத்தைப் பார்த்ததும், “அய்யோ தாத்தா… நீங்களும் இங்க தான் இருக்குறீங்களா?... பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல்ல… எப்படி இருக்கீங்க?... பாட்டி எப்படி இருக்குறாங்க?...” என நலம் விசாரித்துக்கொண்டே போனான் பிரபு…

“வாப்பா… பிரபு… எல்லாரும் நல்லா இருக்குறோம்…” என அவசரம் அவசரமாக பதில் சொன்னவரை சற்றே வியந்து பார்த்தான் பிரபு…

வழக்கமாக அவர் பேசும் முறை போல் இன்று இல்லையே, என்னாயிற்று… என்ற பார்வையுடன் அங்கிருந்த மூவரையும் அவன் பார்க்க, போலீஸ்காரனின் கண்ணில் தப்பாமல் போகுமா?...

“எதாவது முக்கியமான விஷயம் பேசிட்டிருந்தீங்களா?... நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்ன?...” என அவன் அனைவரையும் பார்த்தபடி கேட்க…

விஜய் அனைத்தையும் அவனிடத்தில் சொன்னான்…

“சாரிடா விஜய்… உன் அண்ணனுக்கு உன்னைப் பிடிக்கலைன்னு நீ சொன்னப்போ கூட அது எல்லா வீட்டிலேயும் நடக்குற சாதாரண பிரச்சினைன்னு நினைச்சேன்… ஆனா இத்தனை வருஷம் கழிச்சு அங்க நீ எவ்வளவு ஆசையா போனேன்னு எனக்கு தெரியும்… ஆனா உன் அண்ணன் உனக்கு நல்ல அண்ணனாவும் இல்லை… உன் அம்மா அப்பாவுக்கு நல்ல மகனாவும் இல்லை… பெத்த பிள்ளைக்கு நல்ல தகப்பனாவும் இல்லை… எல்லாத்துக்கும் மேல பிரிஞ்சிருக்குற ருணதியை துருவனை வச்சி மறுபடியும் ஒட்ட வைக்க நினைக்கிறானா உன் அண்ணன்... நிஜமாவே ருணதி தான் பாவம்… இப்படி ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டிருக்காங்களே…” என வருத்தத்துடன் பிரபு சொல்ல

“துருவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டுறப்போ, ருணதி ஜித்தை தேடிப் போவா, அப்போ அவனே பணம் கொடுத்து காப்பாத்தி, ருணதிக்கு ஆறுதல் சொல்லி, அவளோட அனுதாபத்தை சம்பாதிச்சு அது மூலமா அவகூட சேர்ந்துடலாம்னு அவன் கணக்குப் போட்டுருக்கான்… ஆனா அவன் என்ன செஞ்சாலும் ருணதி மனசு மாறாதுன்னு எனக்கு தெரியும்…” என உறுதியாய் சொன்ன மகத்தினை விநோதமாகப் பார்த்தான் விஜய்…

“மச்சான்… நீ வா, போன்னு சொல்லுற அளவுக்கு ருணதி உனக்கு தெரிஞ்சவங்களா?... எப்படி?...” என புரியாதவனாய் பிரபு கேட்க

“சொல்லுறேன்…” என்றவன், விஜயிடம், “ஜித்துக்கும் ருணதிக்கும் எப்போ கல்யாணம் ஆச்சுன்னு சொல்ல முடியுமா விஜய்?...” என கேட்க,

விஜய் அதிர்ச்சியுடன் மகத்தினை ஏறிட்டான்…

“சொல்லுங்க விஜய்…” என மீண்டும் அழுத்தமாய் மகத் கேட்க

விஜய் மௌனமானான்…

“நீங்க எல்லாரும் நினைக்குற மாதிரி ருணதி ஜிதேந்தரின் மனைவி கிடையாது… அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணமும் இன்னும் நடக்கலை… கல்யாணம் பண்ணி வைக்க ஜிதேந்தரின் அம்மாவும், ருணதியின் பாட்டியும் முயற்சி செய்யுறாங்க… அதை ஜிதேந்தரின் அப்பா தடுக்குறார்... அவர் தடுக்குறதுக்கும் ஒரு சில காரணம் இருக்கு… அவர் சொல்லுறதை கேட்டா ருணதி அந்த வீட்டுக்கு மருமகளா போகலாம்… இல்ல அது எப்பவும் நடக்காது… ஆனா ருணதி அவர் சொல்லுறதை நிச்சயம் கேட்க மாட்டா…”

அவன் சொன்னதைக் கேட்ட மூவருக்கும் என்ன பேச என்றே தெரியவில்லை… முதலில் சுதாரித்தது விஜய்தான்…

“நீ என்ன சொல்லுறீங்க மகத்?.... இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?...” என அவனும் படபடப்பாக கேட்க

“மகத்… அப்படி என்ன அவர் கண்டிஷன் போடுறார்?...” என பிரபு அவனிடம் கேள்வி எழுப்ப,

“கண்டிஷன்…” என்றபடி விஜய்யைப் பார்த்தவன், என்ன நினைத்தானோ, உடனேயே “அதை இன்னொரு நாள் சொல்லுறேன்….” என்றான்….

“சரிடா… அத விடு… ருணதி எப்படி அவர் சொல்லுறதை நிச்சயம் செய்ய மாட்டாங்கன்னு சொல்லுற?... ருணதி உங்கிட்ட சொன்னாங்களா என்ன?...” என பிரபுவும் தன் பங்கிற்கு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக

“அவ சொல்லலை… ஆனா சொல்லவேண்டியது என்னிடம் எல்லாம் சொல்லிடுச்சு… நானும் தெரிஞ்சிகிட்டேன்….” என்றான் கண்களை இறுக மூடித்திறந்து…

“என்னப்பா சொல்லுற?... ருணதி சொல்லலைன்னா வேற யாரு உங்கிட்ட சொன்னது?...” என சதாசிவம் அமைதியாய் அதே நேரம் உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனும் கேட்க

“என் கிருஷ்ணாவின் காதல்….” என்றான் சந்தோஷத்துடன்…

அவன் கிருஷ்ணா என்று சொன்னதும், பிரபுவிற்கு சட்டென சில நினைவுகள் வர, அவன் வேகமாக மகத்தின் முன் சென்று,

“கிருஷ்ணாவா?... அப்போ?...” என உற்சாகத்துடன் வினவ

“ஆமாடா… என்னோட கிருஷ்ணா தான்…” என்ற மகத்தினை சந்தோஷத்துடன் அணைத்துக்கொண்டான் பிரபு…

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.