அக்கா .!!!!!!..அலறினாள் மனோகரி
இத பாரு புள்ளை உன்னைய நோகடிக்க இத நான் சொல்லல ...அந்த மனுஷன் குடிச்சுபுட்டு சொன்னத சொல்றேன் ...அவன் உன்னை எதாச்சும் பண்ணிட்டா என்ன பண்ணுவ நீ ...?
சொல்றத புரிஞ்சிக்கோ புள்ளை வேலி இல்லாத பயிர போற போக்குல எந்த மாடு வேணும்னாலும் மேயலாம் ...
இன்னிக்கு ப்ரெண்ட், அண்ணன்ன்னு சொல்லி பழகுறாங்க ..அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல கல்யாணம் பண்ணிக்கிறாங்க ..கூட பொறந்த அண்ணன் தங்கை மட்டும் தான் கடைசி வரைக்கும் அந்த உறவுலையே இருக்கிறது ...
எதைத்தான் இந்த சமூகம் விட்டு வைக்கிறது ஒரு பெண் ஆணுடன் நட்பு பாராட்டினாலும் குற்றம் ....சகோதர பாசத்தை காட்டினாலும் குற்றம்
இதெல்லாம் எங்க போய் முடியுமோ ....? எனக்கு அப்பவே
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்க குல தெய்வம் சுடலைக்கு நேந்துட்டு இருக்கேன் ..
அதிகபடியான பொருட்செல்வத்தில் புதைந்திருப்பது தான் இன்பம் என்று நினைக்கும் அவளுக்கு புரியவில்லை ...கொடுக்க கொடுக்க வற்றாமல் சுரக்கும் தூய அன்பில்….. பாசத்தில் புதைந்திருப்பது தான் நிலையான இன்பம் என...அந்த இன்பம் எதற்கும் ஈடாகது என ...