(Reading time: 28 - 55 minutes)

வனுக்கு தேர்வு நெருங்கிவிட்டிருந்த நிலையில், ஒருநாள் அவளை எதிர்பார்த்து அவன் காத்திருக்க, அவள் வரவில்லை…

“என்னாயிற்று அவளுக்கு…. உடம்பு சரி இல்லையா?...” என்ற எண்ணத்துடன் அப்படித்தான் இருக்க வேண்டும் என முடிவெடுத்து அவனது பள்ளிக்குச் சென்றான்…

‘என்னடா மச்சான்?... ஏன் டல்லா இருக்குற?...” என்ற பிரபுவின் கேள்விக்கு, ஒன்னுமில்லை என பதிலளித்துவிட்டு பேசாமல் அவன் இருந்தான்…

மறுநாளும் இதே தொடரவே, ஒரே நாளில் ஓய்ந்து போனான் அவன்…

அடுத்த நாள் அவளைத் தேடி அவள் வீட்டிற்கே அவன் செல்ல, அங்கே பெரிய பூட்டு போட்டு பூட்டிருந்தது…

“பூட்டு போட்டிருக்கே… யார்கிட்ட கேட்க?...” என அவன் சிந்தித்துக்கொண்டிருந்தபோது,

அவன் அங்கே இருப்பதை பார்த்து, “என்னப்பா?... இங்க என்ன பண்ணுற?...” என பக்கத்துவீட்டிலுள்ள ஒருவர் கேட்க,

“இல்ல பாட்டி….” என அவன் இழுத்த போது,

“ஓ… பாட்டியா?... அவங்க பையனுக்கு எதோ டிரான்ஸ்பர்ன்னு சொன்னாங்க.... வீட்டை காலி பண்ணி போய் மூணு நாள் ஆச்சே…” என்றவர் உள்ளிருந்து தன் கணவர் குரல் கேட்க, “இதோ வரேங்க…” என்றபடி சென்றுவிட, உலகமே நின்றது போல் உணர்ந்தான் அவன்…

“கிருஷ்ணா….” என்ற வார்த்தையையே திரும்ப திரும்ப உச்சரித்தவன், அங்கிருந்து நடைபிணமாய் வந்தான்…

வழக்கமாக அவர்கள் அமரும் ஆலமரத்தின் அடியில் அவன் அமர்ந்த போது, அவள் இல்லாத வெறுமை தன்னை ஆட்கொள்ள, தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவனின் தோளில் ஒரு கரம் விழ,

“கிருஷ்ணா… வந்துட்டியா?...” என்ற கூக்குரலுடன் நிமிர்ந்தவன், அங்கே பிரபு நிற்பதைக் கண்டு மௌனமானான்…

‘டேய்… உனக்கென்ன லூசாடா பிடிச்சிருக்கு?... இங்க வந்து இப்படி உட்கார்ந்திருக்குற?... ஆமா அது யாரு கிருஷ்ணா?...” என அவன் கேட்க மகத்தோ மௌனத்தின் பின் ஒளிந்து கொண்டான்…

“கேட்குறேன்ல சொல்லித்தொலைடா…” என பிரபு சற்றே அழுத்தத்துடன் கேட்க, மகத் “என் ஃப்ரெண்ட் கிருஷ்ணா… அவ அப்பாவுக்கு டிரான்ஸ்பர் ஆகி வெளியூருக்கு போயிட்டா… வேற எதும் கேட்காத என்னை விடு… ப்ளீஸ்…” என கெஞ்சலும் தவிப்புமாய் அவன் சொன்னதும்,

“மச்சான்… லவ் பண்ணுறீயா என்ன?...” என பிரபு கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தான் மகத்…

தொடரும்

Episode # 24

Episode # 26

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.