(Reading time: 22 - 43 minutes)

"பிருத்வி இப்போ அம்மா அப்பா இங்க இருக்காங்க... நான் நம்ம லவ் பத்தி அவங்கக்கிட்ட பேசலாம்னு இருக்கேன்.. அம்மாக்கிட்ட பேசறதோட அப்பாக்கிட்ட பேசினா நம்ம லவ்க்கு பச்சைக்கொடி காட்டிடுவாரு... அப்புறம் அவரு மும்பை போய்ட்டா அவரை பார்ப்பதே கஷ்டம்..

இப்பவே அப்பாக்கிட்ட பேசினா அவர் அங்கிள் ஆன்ட்டிக்கிட்ட வந்து நம்ம மேரேஜ் பத்தி பேசுவாரில்ல..."

"ஏன் அவசரப்பட்ற சப்னா... நான் இப்போ தான் ஓரளவுக்கு எங்க கம்பெனிய கொண்டு வந்திருக்கேன்... இன்னும் கொஞ்ச பெரிய லெவல்க்கு போகனும்... அதுமாதிரி கான்ட்ராக்ட்ஸ் கிடைக்க இப்போ சான்ஸ் வரமாதிரி இருக்கு...

எங்களை விட உங்க ஸ்டேடஸ் கொஞ்சம் அதிகம் தானே... நான் அடுத்த லெவல்க்கு போனா தானே உங்க வீட்ல நம்ம மேரேஜ் பத்தி பேசினாலும் நல்லா இருக்கும்..."

"அம்மா கொஞ்சம் ஸ்டேட்ஸ் பார்க்கிறவங்க தான் பிருத்வி... ஆனா அப்பாவும் தாத்தாவும் அப்படியில்ல... நம்ம மேரேஜ்க்கு கண்டிப்பா ஒத்துப்பாங்க... அம்மாவையும் அப்பா ஒத்துக்க வச்சிடுவாரு..."

"எல்லாம் ஓகே தான்... ஒரு சிக்ஸ் மன்த் ஆவது வெய்ட் பண்ணலாமே... ஒரு கான்ட்ராக்ட் கிடைச்சு... அதோட வேலையை ஆரம்பிச்சதுக்கு அப்புறமாவது பேசலாமே..."

"ஓகே பிருத்வி வெய்ட் பண்ணலாம்.."

இருவரும் கீழே இறங்கி வந்தார்கள்... பார்ட்டிக்கு அழைத்திருந்தவர்கள் ஒருவர் ஒருவராக வந்தனர்... செந்திலும் கேக் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்... பிரணதியும் அந்த அறையை தயார் செய்துவிட்டாள்...

"பிருத்வி எல்லா ரெடி போலயே... பார்ட்டி ஆரம்பிக்கலாமே..." சப்னா தான் கேட்டாள்.

"இல்லை சப்னா... யுக்தா இன்னும் வரலை... அவ வந்துவிடட்டும்.." அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே... " வா சுஜாதா... என்று மதி வாசலுக்குச் சென்றாள். பிருத்வியும் வாசலுக்கு சென்றான்... அதைப் பார்த்து சப்னாவிற்கு பத்திக் கொண்டு வந்தது... இப்போதெல்லாம் பிருத்வியின் வாயில் யுக்தா என்ற பெயர் அடிக்கடி வருகிறது... அந்தப் பேரை கேட்டால் எரிச்சல் தான் வருகிறது இவளுக்கு... இருந்தும் இவளும் வாசலுக்குச் சென்றாள்..

அவளை வரவேற்றுக் கொண்டே வாசலுக்குச் சென்ற மதி சுஜாதா மட்டும் தனியாக வருவதைப் பார்த்து... " என்ன சுஜா.. யுக்தா, சாவித்திரி அக்கா எல்லாம் வரல.." என்ற கேள்வியோடு அவள் அருகில் சென்றாள்.

"இல்லை மதி... யுக்தா வரலன்னு சொல்லிட்டா... நான் தான் அன்னிக்கே சொன்னேனே... அவ கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கான்னு... அதான் நான் தொல்லை பண்ணல... சாவி அக்காவை அவளுக்கு துணையா இருக்கட்டும்னு கூட்டிட்டு வரல..."

தன் அன்னையின் பின்னே வந்த பிருத்வி யுக்தா வரவில்லை என்ற செய்தியை கேட்டு கவலைக் கொண்டான்... அவன் வர சொன்னதிற்காகவாவது அவள் வருவாள் என்று எதிர்பார்த்தான்...

"அவன் பின்னே வந்த சப்னாவிற்கு யுக்தா வரவில்லை என்ற செய்தி சந்தோசத்தை அளித்தது... ஆனால் அதை காட்ட முடியுமா..?? " என்ன ஆன்ட்டி யுக்தா வரலையா.." என்று மதியை பார்த்து கேள்வி எழுப்பினாள்.

அவள் யாரென்று கேள்வியாய் பார்த்த சுஜாதாவிற்கு சப்னாவை அறிமுகப்படுத்தி வைத்தாள் மதி... சப்னாவை பார்த்து மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும்... சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பேசினாள் சுஜாதா... பின் பார்டியை ஆரம்பிக்க சொல்லி கூறினாள்..

"என்ன சுஜா.. யுக்தா வரலைன்னு சொன்னதும் எனக்கு ஒரு ஃபோன் பண்ணியிருந்தா நான் அவளை கண்டிப்பா வர சொல்லியிருப்பேனே.." என்றாள் மதி.

யுக்தாவை ஏன் கூட்டிட்டு வராம வந்தீங்க என்று சண்டை போட்டாள் பிரணதி... நான் இப்பவே போய் அழைச்சிக்கிட்டு வரேன் என்றார் செந்தில்... அதற்கு சமாதானமாக கூறிக் கொண்டிருந்தாள் சுஜாதா... அவள் வரவில்லை என்ற செய்தி கேட்டதிலிருந்து ஏதோ இழவு வீட்டில் நிற்பது போல் நின்றுக் கொண்டிருந்தான் பிருத்வி.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சப்னாவிற்கு  எரிச்சலாக இருந்தது... வீட்டிற்கு மருமகளாக வரப்போறவளை விட்டுவிட்டு யாரோ யுக்தாவை தூக்கி கொண்டாடும் அவர்களைப் பார்த்து கோபமாக வந்தது... இந்த வீட்டிற்கு மருமகளாக வரும்வரை பொறுமையாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.

பார்ட்டி ஆரம்பித்தது... பிருத்வி கேக் வெட்டினான்... எல்லோரும் வாழ்த்தினார்கள்... சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று சுஜாதா, மதி, செந்தில் முதலில் சாப்பிட்டு கிளம்பினர்... பிறகு சப்னா கிளம்பினாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.