“என்னங்க. சுஜான்னு சொன்னீங்க. எங்கே?”
ஆனால் அவள் பேச்சை கேட்கும் நிலையில் அவன் இல்லை. அவன் மீண்டும் ‘சுஜா’ என்று புலம்பினான். அந்த நேரத்தில் அவன் முகத்தில் தெரிந்த ஆசைத்தீயை பயத்துடன் பார்த்தாள் சூர்யா. அவளின் பெண்மனம் விழித்துக்கொண்டது. இத்தனை நாட்கள் கண்மூடித்தனமாக கணவன் மேல் பாசம் வைத்திருந்தவளின் அறிவு விழித்துக்கொண்டது.
தன்னை மறந்த நிலையில் கணவன் தங்கையின் பெயரை சொல்லி அழைக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? எப்போது அவன் மனதில் இந்த தப்பு எண்ணம் தோன்றியது? இதை இப்படியே வளர விடக்கூடாது.
கணவன் மேல் கோபம் பொங்கியது.
அவனை உலுக்கினாள்.
எழுந்தவன் தன் கனவை கலைத்தவள் மீது எரிந்து விழுந்தான்.
அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ா. என்னை வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்கப்பா.”
மகளின் அழுகுரலை அதற்குமேல் கேட்கும் சக்தியில்லை அவருக்கு. போனை வைத்துவிட்டார்.
இவ்வளவு அதிர்ச்சியான விசயத்தை கேட்டுவிட்டு தனது இதயம் எப்படி வெடிக்காமல் இருக்கிறது என்று அவருக்கு புரியவில்லை. சுஜயாவைப் பார்த்த உடன் துக்கம் பொங்கியது.