“அம்மாடி! சுஜா. இந்த அப்பாவை மன்னிச்சிடுடா. பொண்ணைப் பெத்த தகப்பன்னா நல்லவன் கெட்டவன்னு பகுத்தறிஞ்சு பார்க்கத்தெரிஞ்சவனா இருக்கனும். நான் ஒரு தகப்பனா உங்களை பாதுகாக்க தவறிட்டேன்டா. உன் தங்கச்சியையும் அக்காவையும் நீதான்டா பார்த்துக்கனும்.”
அவர் மன்னிப்பு என்று பேச ஆரம்பித்த உடனே தாயின் மறைவுதான் அவளுக்கு நினைவு வந்தது. அன்று அன்னையும் இப்படித்தான் தன் கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்டாள். இந்த நினைவு வந்த உடன் விக்கித்து நின்றாள்.
அந்த நாளே பாலச்சந்தரின் இறுதி நாளானது.
பகலவன் தன் தாயாரின் வற்புறுத்தலை மறுக்க முடியாமல் மறுதிருமணம் செய்ய ஒப்புதல் அளிக்கவே அவளும் தான் விரும்பியபடி ஒரு பணக்கார வீட்டுப்பெண்ணை நிறைய சீருடன் தனது ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லாம் ஒரு மனுசன்னு உட்கார வச்சி பேசியிருக்கே?”
“அவர் என்ன பண்ணார் மாமா?”
“ஒரு பேப்பரை நம்பி உன் வாழ்க்கையை அழித்தவன்மா அவன்.”
“இல்லை மாமா! என் வாழ்க்கையை அவர் அழிக்கலை. அவரோட வாழ்க்கையை அழிக்க கூடாதுன்னுதான் நான் வீட்டை விட்டு வெளியில் வந்தேன். விவாகரத்தும் கேட்டேன்.”