“சுஜா! நீ என்னம்மா சொல்றே?” அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“ஆமாம் மாமா! நான் அந்த வீட்டிலேயே இருந்து நடந்ததை எடுத்து சொல்லிருந்தா கண்டிப்பா அவர் புரிஞ்சுக்கொண்டிருப்பார். எனக்குதான் விருப்பமில்லை.”
“ஏம்மா!”
“பாழாப்போன இந்த உடம்பு மேல ஆசைப்பட்டு அந்த இரண்டு பேரும் நடந்துக்கிட்ட விதத்தை பார்த்தே எனக்கு கல்யாண வாழ்க்கையில் வெறுப்பு வந்துருச்சு. இதே வெறுப்போட என்னால் சந்தோசமா வாழ்ந்திருக்க முடியாது. பகலவனும் என் அழகு மேல ஆசைப்பட்டுதானே கல்யாணம் பண்ணார். அப்போதைக்கு எனக்கு அவர் மேலயும் கோபம் இருந்தது. ஆனால் உரிமையிருந்தும் என்னை அடையறதில் அவர் ஆர்வம் காட்டலை. நிதானமே காட்டினார். அவங்க அம்மாகிட்ட அவர் பேசினதை கேட்டேன். என்னதான் அவர் நல்லவரா இருந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னகை வந்தது.
“நான் இவனுக்காகதான் இத்தனை நாள் உயிரோட இருந்ததே. நீ நல்லாயிரு.”
அதுதான் சூர்யா கடைசியாக பேசியது. கண்களை மூடி வேதனையை அடக்கிக்கொண்டாள். தன் கையில் இருந்த குழந்தையைப் பார்த்தாள்.
‘தாயில்லாமல் இவனை எப்படி வளர்க்கப்போகிறேன்?’
விஸ்வநாதன் உள்ளே வந்தார்.