“இது நல்ல பிள்ளைக்கு அழகு. சாப்பிடும்போது ஏன் மனதை அலைபாய விடறே?” செல்லமாய் அதட்டினாள் சிந்தனா.
சுருதி ரசித்து சாப்பிட்டாள். அவளுக்கு உணவின் சுவையை விட இந்த சூழலின் சுவை மிகவும் பிடித்துவிட்டது. அவள் ரசித்து சாப்பிடுவதைக் கண்ட சிந்தனா உச்சுக் கொட்டினாள்.
“இப்ப ஏன்க்கா உச்சுக் கொட்டறே?” சிற்பி புரியாமல் கேட்டான்.
“அது ஒன்னுமில்லைடா தம்பி. ஏற்கனவே சிக்கின மூனு அடிமைக்காக அம்மா சமையல் அறையை அதகளம் பண்றாங்க. இப்போ புதுசா ஒரு அடிமை சிக்கியிருக்கே. இனி என்ன பண்ணுவாங்களோன்னு இந்த கிச்சனுக்காக பரிதாபப்படறேன்.”
“ஆமா! பரிதாபப்படற ஆளைப்பாரு. அவளை வம்பிழுக்காம சாப்பிடு.” செல்லமாய் சிந்தனாவின் காதைப் பிடித்து திருகினாள் அன்பரசி.
... {kunena_discuss:979}
This story is now available on Chillzee KiMo.
...