(Reading time: 12 - 24 minutes)

வன் அம்மா ரூமில் இருந்தால் பரவாயில்லை.. ஹால்இல் இருக்கும்போது கதவை அடைக்க முடியாமல் தவித்தான்.

மதிய நேரத்தில் தன் மாமனாரிடம் போனில் பேசி விடை பெற்றான்.

அவன் கிளம்பும் நேரம் வர, பிரயுவின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. அவன் தங்கை சென்று இருக்க, ஆதி அம்மா அவன் நிலைமை புரிந்தவராக, ஆதியிடம் சொல்லி விட்டு பக்கத்துக்கு கோவிலுக்கு சென்று அரைமணி நேரத்தில் வருவதாக கூறினார்.

“ப்ரயு.. குட்டிமா.. “ என்று அழைத்தவன், அவளை இறுக்க அணைத்தான். அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

“கண்ணம்மா.. என்னால் முடியலடா.. உன்னை விட்டு போக ரொம்ப கஷ்டமா இருக்குடா..”

அவள் வாய் திறக்கவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

பிறகு “இந்த பையில் உன் தங்கைகளுக்கு வாங்கின கிப்ட்ஸ், அத்தை , மாமாவிற்கு .. எல்லாம் இதில் இருக்கிறது.. நீ எல்லோருக்கும் கொடுத்து விடு.. “

அதற்கும் அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் வருத்தமான குரலில்,

“தப்புதாண்டா.. நான் இன்னும் கரெக்ட்டா பிளான் பண்ணி .. உன்னோட இருந்து இருக்கணும்.. ப்ளீஸ் பேசுடா.. இனிமேல் .. போன்லே தான் குடும்பம் நடத்தனும்.. “ கூறவும், பிரயுவால் தாங்க முடியவில்லை.

அவள் தன்னை சரி படுத்திக் கொண்டு “நல்லபடியா போயிட்டு வாங்க ஆதிப்பா..”

“தேங்க்ஸ் டா.. குட்டிமா.. தேங்க்ஸ் ரதி. “ என்றவன் அவளை அணைத்தபடி இருந்தான். கிளம்பும் நேரம் வர , அவளின் இதழோடு முத்தமிட்டவன்.. கிளம்பி விட்டான்.

ஆதியின் இந்திய பயணம் அவன் எதிர்பார்த்த எந்த மாற்றத்தையும் அவன் வாழ்வில் ஏற்படுத்தாமல் , அவர்கள் வாழ்க்கை தொடங்கிய நிலையிலே நிற்க .. பயணம் முடிந்தது. சென்ற முறை சில வருத்தம் இருந்தாலும் ஆவலாக இருந்த இந்த வெளிநாட்டு வேலை, இந்த முறை அவனுக்கு நிறைய வேதனை கொடுத்தது.. இந்த வேலை தேவையா என்று யோசிக்க வைத்தது.

ஆதி என்ன முடிவு எடுப்பான்? பிரயுவின் மனதில் என்ன இருக்கிறது?

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.