Page 4 of 4
அவளின் அம்மா என்ற அழைப்பு அன்பரசியை நெகிழ்த்தியது.
‘இந்த மாதிரி பிள்ளைகளை அன்புக்கு ஏங்க வச்சுட்டு அப்படி என்ன பெரிசா சேவை பண்றா அந்த தேன்மொழி.’ அவளுக்கு தேன்மொழியின் மீது கோபம் வந்தது.
கவனமாய் அவளது வீட்டைப் பற்றிய பேச்சை தவிர்த்து பொதுவாக அவளது விருப்பம் பற்றி கல்லூரி வாழ்க்கை பற்றி பேசினாள்.
சிற்பியும் சிந்தனாவும் கிளம்பி வந்தனர். அதுவரைக்கும் சுருதி அன்பரசியிடமே வளவளத்துக்கொண்டிருந்தாள்.
சிற்பியும் சிந்தனாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சிந்தனா தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.
இருவரும் வந்துவிடவே அந்த இடத்தில் கலகலப்பு அதிகமானது.
...
This story is now available on Chillzee KiMo.
...{kunena_discuss:979}