(Reading time: 13 - 26 minutes)

சென்னையில் தான் என்றாலும் இது முற்றிலும் வேறு மனிதர்கள் நிறைந்த இடம் . அரட்டை அடிக்கவோ, ட்ரைனிங் தானே என்று அலட்சியமாகவோ இருக்க முடியாத படி முழுக்க முழுக்க இவர்களுக்கு வேலை, கற்று கொடுத்தல் என்று பிஸியாக இருக்க வைத்தது. இந்த ட்ரைனிங்கிற்காக அவள் கண் விழித்து வேறு படிக்க வேண்டியிருந்தது,

அவள் இதை பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எப்போதும் போல் அவள் வேலைக்கு செல்கிறாள் என்று மட்டுமே எண்ணினார்கள்.

ஆதி, ப்ரயுவின் மூன்றாம் திருமண நாள் வர இன்னும் பத்து நாட்கள் இருந்த நிலையில், அன்று ஒரு ஞாயிறு ..

மூன்று மாதங்களாக வார நாட்கள் பயிற்சியில் செல்ல, ஞாயிறு கொஞ்சம் ப்ரீ ஆக இருப்பாள். ஆனால் படித்து கொண்டிருப்பாள்.

அன்று ஏனோ அவளுக்கு படிக்க தோன்றவில்லை. மாலையில் அப்படியே மொட்டை மாடி சென்று கொஞ்ச நேரம் சாய்ந்து அமர்ந்திருதாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...

படிக்க தவறாதீர்கள்... 

முதல் நாள் இரவும், இன்று காலையும் அவன் மெசேஜ் வரவில்லை. அவள் பதில் அனுப்பா விட்டாலும் படித்து விடுவாள். ஆதியும் அவள் படித்து விடுகிறாள் என்று அறிந்துதான் தினமும் மெசேஜ் அனுப்புகிறான்.

என்னதான் பேசாமல் இருந்தாலும் ..அவன் மெசேஜ் ஒரு நாள் வராவிட்டாலும் கவலை ஆக இருக்கும். அன்று முழுதும் அவளால் எந்த வேலையும் பார்க்க முடியாது.   

அவன் அன்னையோடு பேசுவதை அவ்வப்போது கேட்பாள். அவன் மெசேஜ் வராத அன்று ஹால் இல் இருப்பது போல் அவள் மாமியாரும் கணவனும் போன்இல் பேசுவதை கேட்பாள். அவர்கள் பேசுவதை வைத்து, அவன் உடம்புக்கு ஒன்றுமில்லை.. வேறு எதாவது வேலை இருந்திருக்கும் என்று புரிந்து கொள்வாள்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகிவிட்டது அவனிடம் நேரடியாக பேசி. இந்த கோபம் அதிகம் தான். ஆனால் அவளால் அதை விட முடியவில்லை. அதோடு அவள் மனதில் வேறு சில யோசனைகளும் அவளை குழப்பிக் கொண்டிருந்தது. ஆதியோடு பேசினால் அவள் கொஞ்ச நாளில் அவள் உடல் நிலையை பற்றி சொல்லி விடுவாள். அதன் பின் என்று அவள் யோசித்த விஷயம் தான் அவளை குழப்பத்திலும், பயத்திலும் தள்ளியது.

ரொம்ப நாள் கழித்து அவள் மனதில் இன்று ஏதோ சந்தோஷம் தோன்றியது. ஏனோ.. அவளின் மனம் ஆதியை தேடியது.

அப்போது எங்கிருந்தோ காற்றில் கசிந்து வந்த பாடலோடு அவளும் பாட ஆரம்பித்தாள்.

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
அ அ அ வாள்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை
எனை தன் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் நல்ல தேதி
நான் உனை நீங்கமாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

அவளின் குரலோடு ஆதியின் குரலும் ஒலிக்க , திரும்பி பார்த்தவள் ஆதியை காணவும் முதலில் பிரமை என்று நினைத்தவள்,

அந்த உருவம் அருகில் வரவும், திகைத்து விழித்தாள்.

அருகில் வந்தவன் அவளின் முகத்தின் அருகே சொடக்கு போட்ட படி

“ஹாய்.. பொண்டாட்டி... எப்படி இருக்க?”

ப்ரயு இன்னமும் திகைப்பில் இருந்து வெளியில் வரவில்லை.

அவள் அப்படியே நிற்க, அவளை தூக்கி சுற்ற வேண்டும் என்ற ஆசையை அடக்கி, பொது இடமாக இருப்பதால், கை பிடித்து அழைத்து தங்கள் வீட்டிற்கு சென்றான்.

அங்கே அவன் அம்மாவும் இன்னும் திகைப்பிலிருந்து வெளியே வர வில்லை.

ப்ரயு மொட்டை மாடிக்கு செல்லவும், டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆதியின் அம்மா, வாசலில் யாரோ நிற்கவும், யார் என பார்த்தவர்.. திகைத்து நின்று விட்டார். முன்தின இரவு பேசும் போது கூட அவன் வருவதை பற்றி சொல்லவில்லை.

அவரின் திகைப்பை பார்த்தபடி ,

“ப்ரயு எங்கே அம்மா? “ என்றான்.

அவர் மொட்டை மாடி நோக்கி கை காட்டவே , அவன் வேகமாக சென்று விட்டான். இன்னும் அவன் வந்தது நிசமா, கனவா என்ற நிலையிலேயே அவர் நிற்க, மொட்டை மாடியில் இருந்து பிரயுவை அழைத்து வரவும் , கொஞ்சம் தெளிந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.