“என்னடா.. ஆதி.. வரேன்னு சொல்லவே இல்லை ?”
“உங்களுக்கு surpraise கொடுக்கலாம்னு தான் மா சொல்லல..”
பிரயுவிற்கு இன்னுமே தெளியவில்லை.
“அதுக்குன்னு இப்டியா டா..? இப்போ மதியானம் பேசினியே? அப்போ கூடவா சொல்ல மாட்ட?’
“அது நான் travel இருக்கும் போது பண்ணினேன்.. சரி வீட்டில் இருக்கீங்களா? வெளியே எங்கியும் போயிருப்பீங்களா என்ற சந்தேகம் இருந்தது. அதுதான் பேசி கேட்டு கிட்டேன்.”
அவன் அப்படியே சோபாவில் அமர,
‘இப்போ என்ன விசேஷம் அத்தை? தீடிர்னு வந்துருக்கார்?” என்று கேட்டாள் ப்ரயு.
அவருக்கும் அதே தோன்றியதோ என்னவோ.. அவரும் அவள் எண்ணியதையே கேட்க,
“தீடிர்ன்னு வந்திருக்கேயே ? எதாவது ஆபீஸ் மீட்டிங் ஆ? எத்தனை நாள் லீவ் போட்டுருக்க?
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
அவன் இருவரையும் பார்த்தபடி ..
“மீட்டிங், லீவ் எல்லாம் இல்லை.. அங்கிருந்து வேலை எல்லாம் முடித்து விட்டு வந்து விட்டேன். “
அவன் வந்ததை விட இது மிகவும் ஆச்சரியமான விஷயமாக தோன்றியது இருவருக்குமே.. அவன் அங்கே சென்றது முக்கியமான வேலை என்று தெரியும். இடையில் வர கூடாது என்றுதான் conctract போட்டு அனுப்பினர் அவன் கம்பனியில்.
“என்னடா சொல்ற.. உன் contract முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கே?”
“இல்லைமா... நான் இதோட என் contract முடிச்சுட்டேன் .. இனிமேல் போக வேண்டிய அவசியம் இல்லை” என்றால் பிரயுவை பார்த்தபடி.
பிரயுவிற்கு இப்போது அவன் சொன்னதை நம்பவே முடியவில்லை.. அவள் அப்படியே நிற்கவும், ஆதி
“அம்மா.. எனக்கு travel பண்ணது கசகசன்னு இருக்கு.. நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன் “ என்றவன்,
பிரயுவிடம் “எனக்கு காபி எடுத்துட்டு வரியா ?” என்றான்.
அவள் தங்கள் அறைக்கு காபி எடுத்துக் கொண்டு போகவும் , கதவுக்கு பின்னால் இருந்தவன், கதவை சாத்தினான்.
பின்னாடி இருந்து அவளை அணைத்தவன்,
“ஹே.. கண்ணம்மா.. எப்படி டா இருக்க..? உன்னை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு? ஏன் இப்படி இளைச்சி, வாடி போய்ட்ட..? ஒழுங்கா சாப்பிடுறையா இல்லியா ? உன்னை கூட்டிட்டு போய் புல் செக் up பண்ணனும் டா ..” என்று அவளிடம் வாய் மூடாமல் பேசியவன், அவளை தன் அணைப்புக்குள் இன்னுமாக இறுக்கினான்.
அவனின் வேகத்தில் அவள் மூச்சு முட்ட நின்றிருக்க, அவன் அவளை அணைத்தபடியே கட்டிலில் உட்கார வைத்தான்.
அவள் இன்னும் அவனிடம் நேரடியாக பேசவில்லை என்று உணர்ந்து,
“ஹே.. ப்ரயு.. என்னடா இன்னும் உன் கோபம் குறையவில்லையா? நான் அன்னிக்கு அப்படி உன்கிட்ட பேசி இருக்க கூடாது. எனக்கு நீ உன்னை பார்த்துக் கொள்ளவில்லை என்ற கோபத்தில் அப்படி பேசிட்டேன். அதுக்கு இத்தனை நாள் எங்கிட்ட பேசாமல் தண்டனை கொடுத்திட்ட இல்ல.. இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டேன்.. பேசு டா ?” என்று கெஞ்சி கொஞ்சினான்.
ஆதி கெஞ்சினாலும், ப்ரயு மனதில் இன்னும் ஏதோ சந்தேகம் இருந்தது. அதை அவள் வாய் விட்டு சொல்லவில்லை. ஆனால் அவனிடம் அதை காட்டவும் இல்லாமல்,
“காபி ஆறிட போகுது எடுத்துக்குங்க “ என்றாள்.
அவள் பேசிய சந்தோஷத்தில், ஆதி வேறு எதிலும் கவனம் வைக்காமல்,
“ப்ரயு.. கிட்டத்தட்ட ஆறு நாளா இருபது மணி நேரம் வேலை பார்த்து பயங்கர அலுப்பா இருக்கு. அதனால் ஒரு ரெண்டு நாளைக்கு நான் முழுக்க தூங்கறேன்.. எனக்கே பசிக்கும் போது எழுந்து சாப்பிடுறேன்.. யாரும் disturb பண்ணாமல் பார்த்துக்க.. சரியா ?’
என்றவன், காபி குடித்து விட்டு , தன் அம்மாவிடமும் சென்று சொல்லி விட்டு படுத்து விட்டான்.
தூங்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரயு.
தொடரும்
{kunena_discuss:948}