ஆனால் கிளம்ப வேண்டிய நேரத்தில் யுக்தாவோ தலைவலி என்று வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்... ஏற்கனவே தன்னால் தான் வரூன் பிரணதி கல்யாணம் முடிவாகாமல் இருக்கிறது... இதில் தேவாவும் கவியிடம் காதலை சொல்லாமல் இருப்பதற்கு காரணம் தான் தானோ என்று யுக்தா யோசித்தாள்... எப்படியோ தேவாவோடு கவி தனியாக வெளியில் போகமாட்டாள்... அதனால் இந்த சினிமாவிற்காவது நாம் போகாமல் இருந்தால் அவர்கள் இரண்டு ஜோடியும் கொஞ்சம் சந்தோஷமாக இருப்பர் என்று நினைத்தாள்.
ஆனால் யுக்தா வரவில்லை என்றதும்... கவியும் வரமாட்டேன் என்று சொன்னாள்... பின் தேவாவிடம் யுக்தா கெஞ்சிக் கேட்கவே... தேவாவும் கவியிடம்... "ரெண்டுப்பேரும் வரலைன்னா டிக்கெட்க்கு கொடுத்த ரூபாய் வேஸ்ட் ஆகாதா...?? வரூன் தான் டிக்கெட் புக் செய்தான்... இருந்தாலும் அவனுக்கு மட்டும் பணம் மரத்துலயா காய்க்குது.. அவ தான் தலைவலின்னு சொல்றாளே... நீ மட்டுமாவது வா சங்கு..." என்று சமாதானம் பேசி அழைத்துச் சென்றான்...
யாரும் இல்லாததால் கொஞ்ச நேரம் சிறிய சிறிய வேலைகளை செய்தவள்... பின் டி.வி யின் முன் உட்கார்ந்தாள்... அவளுக்கு பிடித்த பாடல் அதில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது....
கரிசல் காட்டுப் பெண்ணே...
என் அவனை கண்டாயா..??
கவிதை பேசும் கண்ணே...
என் அவனை கண்டாயா..??
என் இருவிழி நடுவில்
இருப்பவன் எவனோ...
அவனை கண்டாயா..??
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
என் இருதய நரம்பினை
அறுத்தவன் எவனோ...
அவனை கண்டாயா..??
கொஞ்சம் கனவுத் தந்தவன்
என் தூக்கம் திருடிச் சென்றான்...
என்னில் தன்னை இணைத்தவன்
இன்று ஏனோ தனியே சென்றான்...
என் இருவிழி நடுவில்
இருப்பவன் எவனோ...
அவனை கண்டாயா..??
என் இருதய நரம்பினை
அறுத்தவன் எவனோ...
அவனை கண்டாயா..??
என்று அந்தப் பாடலுடன் அவளும் அந்தப் பாடலை முனுமுனுக்க... வீட்டில் காலிங்பெல் சத்தம் கேட்டது.... அம்மாவும் சாவிம்மாவும் இப்போது தான் போனதால்... வந்திருப்பது கவி, தேவாவாகத்தான் இருக்க வேண்டும் என்றுப் பாடிக் கொண்டே போய் கதவை திறந்தால் அங்கே அவளவன் நின்றுக் கொண்டிருந்தான்...
வந்திருப்பது பிருத்வியா என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக... "வாங்க பிருத்வி.." என்று வரவேற்றவள்... கதவை திரும்ப சாத்தாமல் கூட உள்ளேச் சென்று அவனை அமர வைத்தாள்... பின் என்ன செய்வது என்று தெரியாமல் ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ் வாட்டர் எடுத்து அவனிடம் கொடுத்தாள்...
அதை வாங்கி பருகியவன்... வீட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு... " வீட்டில் யாரும் இல்லையா..??" என்று கேட்டான்.
"எல்லாரும் வெளிய போயிருக்காங்க..." என்று பதில் சொன்னாள்.
பின் கொஞ்சம் தயங்கியவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்...
"யுக்தா நான் அன்னைக்கு பேசினது தப்பு தான்... அதுக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்... வரூன் எதுக்கு வந்தான்னு நீ சொல்லாததால தான் நான் கோபப்பட்டேன்... தப்பு தான்... நான் அப்படி பேசியிருக்கக் கூடாது.. அதுக்காக என்னை மன்னிச்சிடு..." என்று அவன் மன்னிப்பு கேட்ட போது... உண்மையிலேயே சந்தோஷப்பட்டாள் அவள்...
"அதுக்காக நீ டைவர்ஸ் வரைக்கும் போறது நல்லதில்ல... அம்மா, அப்பா, பிரணதி எல்லோரும் ரொம்ப வருத்தப்பட்றாங்க... அதனால வீட்டுக்கு வா.." என்று அவன் அழைத்த போது... அப்போ அத்தை மாமாக்காக தான் இப்போது வந்திருக்கானா..?? அவனுக்காக இல்லையா..?? என்று மனம் கேள்விக் கேட்டது...