(Reading time: 9 - 17 minutes)

மிதுன் “நான் இவன்கிட்ட மால்ல பார்த்த விஷயத்தை சொல்லிட்டு அப்படியே “டேய்.. இப்போ அந்த மந்தையில் இருந்து ஒரு ஆடு கிளம்பிடுச்சு.. சோ இனிமேல் என்னோட வேலை ஈசி.. இந்த முறை அவங்கள எப்படியாவது கண்டுபிடிச்சுடுவேன்.. “ என

அர்ஜுன் “டேய். மகிமாவை சந்திக்கும்போது சுபாவை பத்தி விசாரிச்சு சொல்லுடா” என்று கேட்டேன்.. அதுக்கு இந்த ஓணான்.. “ஹேய்.. அது எல்லாம் என்னால் முடியாது.. நான் மகிகிட்ட சுபா வ பத்தி பேசமாட்டேன்.. என்னை அன்னிக்கு எப்படி எல்லாம் lecture கொடுத்து கடுப்பேத்தின.. இப்போ நீயே கண்டுபிடி “ன்னு சொல்லிட்டு வச்சுட்டாண்டா.. அந்த கோபத்துலே சுபா வந்த முதல் நாள் அவ மேலே மோதிட்டு அவளை பயங்கரமா முறைச்சேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு தான் அது சுபான்னு தெரிய வந்துது. அதுக்கு அப்புறம் அவளை ரகசியமா ரசிச்சுட்டு இருக்கேன். அவளை தெரியும்னு சொல்லாமல் இப்போ வரைக்கும் maintain பண்ணிட்டு இருக்கேன். இவன் இப்படி பண்ணினதாலேதான்.. மிதுனையும் வில்லன்னு சொன்னேன்..” என்று முடித்தான் அர்ஜுன்..

ராகுல் மிதுனிடம் “ஏண்டா.. உன்னாலே மகிய பத்தி தெரிஞ்சுக்க முடியலையா?”

“ம்ப்ச்.. இல்லைடா... எங்கே போனாலும் வருண் முன்னாடி நிக்கரண்டா.. இந்த ஓரங்குட்டானும் இத்தனை நாள் சொல்லாமல் விட்டுட்டு.. நான் அவர்க்கு வில்லனாம்.. அவனுக்கே ஓவரா தெரியல..”

“ஹ்ம்ம் .சரி .. சரி.. இப்போ அந்த வருண என்ன பண்ணலாம்.. “ என்று ராகுல் கேட்க

“சிம்பிள் மச்சான்.. அவனையும் engage ஆக்கிடலாம் “ என்றான் அர்ஜுன் ..

“எப்படிடா.. ?”

“மிதுன் .. நீ வருண் கிட்ட நல்லா பழகி அவனோட activities வாட்ச் பண்ணு. .அப்புறம் அவனுக்கு பொண்ணு தேடலாம்.. “

“டன்.. “ என்றான் மிதுன்..

மழை பொழியும்

Episode 10

Episode 12

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.