'பச்... நான் வர்றதுக்குள்ளே என்ன அவசரம் உனக்கு? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அன்கம்ஃபர்டபிள்... ஜீன்ஸ் டி ஷர்ட் அன்கம்ஃபர்டபிள்... உன்னை வெச்சிட்டு நான் என்ன பண்ண???' எரிச்சலை காட்டியது மறுமுனை.
'இல்லபா.... அது... அங்கே...'
'எதுவா இருந்தாலும் எனக்காக பத்து நிமிஷம் வெயிட் பண்ண முடியாதா உன்னாலே? சரி இப்போ எங்கே இருக்கே???'
அங்கே நடக்கும் உரையாடல் முழுவதுமாக புரியாவிட்டாலும் அதன் தொனி புரியாமல் இல்லை பரத்துக்கு. அவன் அங்கே உறுமுவதும்.... இவள் முகம் இங்கே வாடுவதும்.... சுறுசுறுவென பொங்க ஆரம்பித்தது அவனுக்குள்ளே. அவனது மனதின் வேகத்துக்கு ஏற்ப பறந்துக்கொண்டிருந்தது கார்.
'அங்கே எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமா???' அவள் கொஞ்சம் தழைந்த குரலில் கேட்க...
எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை அருண். அவன் மனதிற்குள் இந்த காலத்து நாகரீக மங்கையரின் வரிசையில் அவள் இல்லை என்பதே உறுத்திக்கொண்டிருந்தது.
'எந்த கதையும் கேட்க நான் இப்போ ரெடியா இல்லை. நீ இப்போ எங்கே இருக்கே.? உன்னாலே இங்கே மறுபடியும் வர முடியுமா??? முடியாதா? அவன் கேட்க... என் சொல்வதென்ற தவிப்பு மேலிட ஒரு முறை பரத்தை பார்த்துக்கொண்டாள் அபர்ணா.
அவன் பார்வை சாலை மீதே இருக்க, சில நொடிகள் பேசாமலே இருந்தாள் அவள்...
'ஹலோ கேட்டது காதிலே விழுந்ததா, இல்லையா??
'இப்போ... மறுபடியும் அங்கேயா??? இல்ல அருண் கஷ்டம். என்னாலே முடியாது...' தெளிவாக வந்தன வார்த்தைகள்.
முடியாது இல்லையா??? சரி ஒகே..... இதுக்கெல்லாம் என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும் நான் .சென்னை வந்து பார்த்துக்கறேன்.... எல்லாத்தையும்....' சொல்லிவிட்டு பட்டென துண்டித்தான் அழைப்பை. இதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை அபர்ணா. அவள் மறுபடியும் அழைக்க மறுபடியும் கட். அவள் முகத்தில் தோல்வியின் பாவம்.
கைப்பேசி அவள் விரல்களுக்கு நடுவில் சுழன்று கொண்டிருக்க பரத்தின் பக்கம் திரும்பவே இல்லை அவள். அவனுடைய சாதரண பார்வை கூட அவளை மோசமாக குத்திக்காட்டுவதை போலவே தோன்றும் அவளுக்கு. அது அவனுக்கும் புரியாமல் இல்லை.
தன்னிடமே ஆனாலும் அவள் தோற்று போவதை அவன் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. சாலையை பார்த்தபடியே காரை செலுத்திக்கொண்டிருந்தான் பரத், மனதின் கொதிநிலை மட்டும் ஏறிக்கொண்டே இருந்தது. சில நிமிடங்கள் இடைவெளி விட்டு அவள் மறுபடியும் அழைக்க, அழைப்பு ஏற்கபடவில்லை.
'தன் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் பெண்ணை இப்படி பந்தாடுபவன் எப்படி பட்ட மனிதன்???'
பற்றி எரிந்தது அவனுக்குள்ளே. தனுக்குத்தானே போட்டு வைத்திருக்கும் விலங்குகளை உடைத்துக்கொண்டு... எல்லாவற்றையும் மறந்து.... அவளை சிறையெடுத்துவிட துடித்தது மனம்..
'நான் அப்படி செய்தால் அவளுக்கு வலிக்குமே!!!' கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டான் பரத்.
சில நிமிடங்களில் மருத்துவமனையை கார் அடைந்திருக்க, இருவரும் இறங்க எதிர்ப்பட்டான் விஷ்வா.
'ஹேய்... அப்பூ இது என்ன ஜீன்ஸ் டி ஷர்ட் எல்லாம்???' ஆச்சர்யம் வழியும் குரலில் கேட்டான் விஷ்வா. பதில் பேசாமல் உள் நோக்கி நடந்தாள் அபர்ணா.
'என்னடா..... ஏதாவது பிரச்சனையா??? நீங்க ரெண்டு பேரும்... எப்படி ஒண்ணா???'
'எந்த பிரச்னையும் இல்லை.... அஸ்வினி எப்படி இருக்கா??? பார்க்கலாமா அவளை??? இயல்பாக அவன் பேச்சை மாற்றுவதை உணராமல் இல்லை விஷ்வா.
'சரி வா... பார்க்கலாம்... நானே உன்னை கூப்பிடலாம்னு இருந்தேன்... எங்க ஹாஸ்பிடல்லேர்ந்து எனக்கு ஃபோன் மேலே ஃபோன் நான் போயாகணும்...' என்றபடியே அஸ்வினி இருக்கும் அறைக்கு பரத்தை அழைத்து சென்றான் விஷ்வா.
அதற்குள் சுரிதாருக்கு மாறி சற்றே நிம்மதியுடன் வந்து அமர்ந்தாள் அபர்ணா. என்ன நடந்துக்கொண்டிருக்கிறது அக்காவுக்குள்ளே??? அவளை படித்துக்கொண்டே இருந்தாள் அஸ்வினி. அங்கே அவர்களுடன் அபர்ணாவின் அப்பாவும் அமர்ந்திருந்தார்.
பரத் அஸ்வினியை நலம் விசாரித்து முடிக்க...
'நானும் அப்பாவும் இன்னைக்கு ஊருக்கு கிளம்பறோம்டா. அஸ்வினி டிஸ்சார்ஜ் ஆக ரெண்டு நாள் ஆகும்.... நீ கொஞ்சம் இவங்களை பார்த்து டிஸ்சார்ஜ் பண்ணி ஊருக்கு அனுப்பி வைக்கறியா??? விஷ்வா கேட்க... புன்னகைதான் பரத்.
'இதை விட எனக்கு வேறென்ன வேலை.... கண்டிப்பா பார்த்துக்கறேன்... நீ கிளம்புடா...'
மாமா ' என்றான் விஷ்வா அபர்ணாவின் அப்பாவை பார்த்து.
'இவன் என்னோட ஃப்ரெண்ட் பரத்..... இவன் உங்களை பார்த்துப்பான் ...எனக்கு ஹாஸ்பிடல்லே கொஞ்சம் வேலை இருக்கு. அன்னிவர்சரி ஃபங்க்ஷன். வேறே இருக்கு ... போயிட்டு வந்திடறேன் ' என்றான் விஷ்வா. சொல்லவில்லை விஷ்வா!!! பரத் யாரென சொல்லவில்லை!!!
'ஓ.. உன் ஃப்ரெண்ட்டா வெரி குட்...' பரத்தை பார்த்து நட்பாக கைகுலுக்கினார் அப்பா...'