மாலை நேரங்களில் ஊரைச் சுற்றிப் பார்க்க கிளம்பிவிடுவர். இரவு நேரங்களில் பெற்றோர் நினைவு வரும். சிற்பிக்கு எந்த உண்மையும் தெரியாததால் அவன் தந்தையின் உடல்நிலைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டான். அதுவும் அவர் நன்றாக இருக்கிறார் என்று தெளிவான உடன் இங்கே ஒன்றிவிட்டான். ஆனால் உண்மை தெரிந்த சிந்தனாவுக்கு தந்தையின் துரோகம் தாங்க முடியாததாய் இருந்தது. அவருக்கு உதவியாய் இருக்க வேண்டும் என்றே தான் தொழில் நிர்வாகப் படிப்பை எடுத்து படித்ததை எண்ணி வருந்தினாள்.
இனிமேல் தந்தையோடு இணைந்து தன்னால் பணிபுரிய முடியுமா? என்ற சந்தேகம் வந்தது. உடனே ஒரு கேலிச்சிரிப்பும் அவளுக்குள் எழுந்தது. என்னவோ தந்தை தன்னை அலுவலகத்துக்குப் பணி புரிய வருந்தி அழைத்து விட்டது போல் தான் அதற்கு மறுப்பத
...
This story is now available on Chillzee KiMo.
...
லையைப் பாருங்க.”
அப்போது அங்கே வந்த ராமு அவர்களின் அன்யோன்யத்தைப் பார்த்து மகிழ்ந்து நின்றான். அவன் தயங்கி தள்ளியே நின்றுவிட்டதை பார்த்து புகழேந்தி அவனை அழைத்தார்.
“வாப்பா ராமு. ஏன் அங்கேயே நின்னுட்டே?”
“எங்கேயோ போகனும்னு வரச் சொன்னீங்களே முதலாளி. வண்டி தயாரா இருக்கு.”