அன்பரசி கேள்வியுடன் நோக்கினாள்.
“நீயும் கிளம்பு அன்பு.”
“எங்கேங்க போறோம்.”
“ம்ம்...” என்று யோசித்தவர் குறும்பு புன்னகையுடன் அவளை ஏறிட்டார்.
அவளும் ஆவலுடன் நின்றாள்.
“என் மாமனார் வீட்டுக்கு.”
அவரது பதில் அவளுக்கு ஆனந்த அதிர்ச்சியாய் இருந்தது.
தங்கள் திருமணத்திற்கு பிறகு தான் மட்டுமாய் பிறந்த ஊருக்கு சென்ற போது அங்கே நடந்த கேலிப்பேச்சினால் தான் உறுதி பூண்டது நினைவுக்கு வந்தது. அதன் பிறகு அவளுக்கு அங்கே செல்ல வேண்டும் என்று தோன்றவே இல்லை. ஆசை இருந்தாலும் வேலை வேலை என்று அலையும் கணவனை தன் பொருட்டு கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
ஆரம்பத்தில் மாமனார் மகனை ஊருக்கு போக சொன்னதும் அவளுக்கு தெரியும். அவனுக்கு அதில
...
This story is now available on Chillzee KiMo.
...
பொழியும் பிள்ளைகளும் தனக்கு இல்லாமலே போயிருப்பார்கள்.
“இந்தாங்க மாப்பிள்ளை.”
வணங்காமுடி நீட்டியவற்றை வாங்கியவர் எதுவும் சொல்லாமல் மனைவியிடம் கொடுத்தார். அவள் பார்த்துவிட்டு கேள்வியுடன் தந்தையைப் பார்த்தாள்.
“இதெல்லாம் என்னப்பா?”
“உனக்கு சேர வேண்டிய பங்கும்மா.”