08.இது பேய்க் காதல் - புவனேஸ்வரி
ஜனனம் ஒருமுறை தான்!
மரணம் ஒருமுறை தான்!
காதலும் ஒருமுறை தான் எனில்,
ஒரே காதலை ஓராயிரம் முறை தொலைப்பேனோ?
தவிப்பில் தெய்வீகன்!
துன்பம் எனும் ஆழியில்
சுவாசத்தை பறிகொடுத்தவனின்
கண்ணீரும் வற்றி விட்டது..
"எத்தனை பேர்யா என்னை அவ கிட்ட இருந்து பிரிப்பீங்க?
இதற்கு பதிலாக என்னை கொன்னுடுங்க"
விரக்தியில் வெடித்தன வார்த்தைகள்!
தூயவிழியின் இடம் அறிய
உண்மையை உரைத்திட வேண்டுமாம்!
பெரியவர் மிரட்டவும்,
உடைத்து சொன்னான் உண்மையை !
மகனே,
உண்மை உணர்வாய் !
உயிர் நீத்த ஆத்மாவும்
உடல் கொண்ட ஜீவனும்
சேர்வது சாத்தியமில்லை!
இயற்கைக்கும் உகந்ததல்ல!
நான் வேதம் அறிந்தவன்,
மாந்திரீகமும் புரிந்தவன்!
முதல் பார்வையிலேயே -உன் காதலை
முற்றிலும் அறிந்தேன் !
காதலின் சக்தியை உதறிவிட்டு
தூயவிழியிக்கு முக்தி கொடு !
அவளுக்கென தர்ப்பணம் தந்திடு
அதில் உன் காதலையும் சமர்ப்பணமாக்கிடு!
மீண்டும் வந்திடுவாள்
மங்கையவளே உன் மகளாய்!
பெரியவரின் பேச்சுக்கு தெய்வீகனின் பதிலென்ன? அடுத்த வாரம் சொல்றேன்.
அடுத்த அத்தியாயத்தில் முற்றும் !
{kunena_discuss:1072}