“என்னது.. இன்னிகேவா.. நான் ரெண்டு நாள் இருப்பான்னு நினைச்சேனே.. இப்போ என்ன செய்யுறது டா..”
“ஹ்ம்ம்.. ஸ்டேஷன் போக முடியாது.. அவங்க அப்பா , அம்மா எல்லோரும் இருப்பாங்க. ஒன்னு பண்ணலாம் மச்சான்.. evening எங்கியாவது வர சொல்லி மீட் பண்ணு..”
“ஹ்ம்ம்.. அதான் செய்யணும். .சரி டா.. நானே அவகிட்ட இதோ பேசறேன்.. “ என,
“சரிடா..” என்று வைத்தான்.
பின் நிஷாவிற்கு பேசிய ராகுல்
“ஹேய்.. நிஷு.. என்னடா.. இன்னிக்கு ஊருக்கு போறியா.. எங்கிட்ட சொல்லல.. அர்ஜுன் எனக்கு சொன்னான்..”
“இல்ல ரகு.. உங்ககிட்ட எப்படி பேச தெரியல.. அதுவும் இல்லாம வீட்டிலே என்ன position தெரியாமல் சங்கடம் கொடுக்க வேண்டாம்னு தான் அண்ணன் கிட்ட சொன்னேன்..”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
“அதுவும் சரிதான். நானும் அத யோசிச்சு தான் உனக்கு கால் பண்ணமால் இருந்தேன்.. ஹேய்.. ஊருக்கு போகும் முன் நாம் மீட் பண்ணலாமா டா.. உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்க ஆசையா இருக்கு.. “
“ஹ்ம்ம்.. ஆனால் எப்படி வருவது தெரியல.. எனக்கு சென்னை அவ்ளோ பழக்கம் இல்லை.. அதோட அப்பா, அம்மா இருக்கும்போது தனியா வரது கஷ்டம்..”
“ஹ்ம்ம். புரியுது.. ஹேய்.. சுபா இருக்கால்ல.. அவள கூட்டிட்டு வா.. “ என ஐடியா கொடுக்க,
“அவ கிட்ட என்ன சொல்றது “ என்று வினவினாள் நிஷா..
“நீ போன் அவகிட்ட கொடு .. நான் பேசறேன்.” என, நிஷா சுராவிடம் போன் கொடுத்தாள்..
“ஹாய். ப்ரோ.. என்ன விஷயம்.. ? “
“ஹேய்.. சிஸ்.. உங்கிட்ட பேச காரணமா வேணும்..”
“இந்த சோப்பு போடுற வேலை எல்லாம் இங்கே வேணாம்.. நான் என்ன செய்யணும்.. அத மட்டும் சொல்லுங்க ப்ரோ.. “
“அதானே.. நம்ம சிஸ்.. பயங்கர ஷார்ப் ஆச்சே.. என்ன கொஞ்சம் சேதாரம் அதிகமா இருக்கும்..”
“ஹலோ.. என்ன உங்க காரியம் நடக்கணுமா.. வேண்டாமா..?”
“சரி சரி.. உன் friend கூட்டிட்டு evening வெளியே வாயேன்.. நானும் அவளும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கோம்.. “
“அதுக்கு ஏன் நான் வரணும்.. நீங்களே அவளை வந்து கூட்டிட்டு போகலாமே..?”
“ஹேய்.. tubelight நாங்க lovers தான்.. engaged இல்லை.. இன்னும் வீட்டுக்கு தெரியாது.. நியாபகம் இருக்கா..?”
“ஒஹ் அப்படி ஒன்னு இருக்கோ.. சரி சரி.. பீச்க்கு கூட்டிட்டு வரேன். ஆனால் மொத்த செலவும் உங்களோடது.. “ என,
“சரிடா.. கரெக்டா.. ஒரு நாலாரை மணிக்கு வந்துடுங்க..” என்று வைத்தான்..
சொன்னபடி வீட்டில் எப்படியோ பேசி சம்மதம் வாங்கி இருவரும் கிளம்பினார்கள்.. ருக்மணி தான் மிகவும் தடுத்தார்.. இரவு ட்ரைன் இருக்கு.. இப்போ அலைய வேண்டாம், அடுத்த தடவை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நிறைய தடா போட்டார்.. அதனையும் தன் கிண்டல் மற்றும் கெஞ்சல் மூலம் சமாளித்து சுறா கிளம்பினாள்.
அங்கே ராகுல் தன் நண்பனை கெஞ்சி கொண்டு இருந்தான்.
“டேய்.. அர்ஜுன். .நீ வாடா.. “
“ஏண்டா.. lovers நீங்க பேச போறீங்க.. நான் வந்து என்ன செய்ய போறேன்..”
“இல்லடா.. என் ஆளு கூட வர மொக்க பீஸ் சமாளிக்க உன்னால்தான் முடியும்.. அவளுக்கு பல்பு எரியர்துக்குள்ளே எனக்கு fuse போய்டும்.. நீ அவள சமாளிச்சன்னா, நான் நிஷா கூட ப்ரீ யா பேசுவேன்.. ப்ளீஸ் டா.”
“ஹ்ம்ம்.. எனக்கு போரடிக்குமே.. சரி.. நான் மிதுன வர சொல்றேன்..” என்றபடி மிதுனை நேராக பீச்க்கு வரசொன்னான்..
அதே போல் சுறா மகிமாவை வர சொல்லி இருக்க, அங்கே பீச்லே வைத்து அவளை பார்த்தா நிஷா திடுக்கிட்டாள்..
“அடியேய். நீ கடலை போடுற வரைக்கு நான் கடல பார்த்துட்டு இருக்க முடியுமா..? மகி வந்தா நானும் அவளும் அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வருவோம்.. “
“ஹேய்.. ஆனால் நான் இன்னும் வீட்டில் எதுவும் பேசல.. அதுக்கு முன்னாடி மகி பார்த்தா எங்க வீட்டில் சொல்ல மாட்டளா?
“அது பார்த்துக்கலாம் விடு.. “
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போதே வந்த அர்ஜுன் ராகுல் இருவரும் இவர்களை நோக்கி வந்தனர்..
முதலில் சற்று நேரம் நால்வரும் பேசிக் கொண்டு இருந்தனர்.. பின் ராகுல் கண்ணை காட்ட , அர்ஜுன் தலையில் அடித்துக் கொண்டு
“சுபத்ரா.. வருகிறாயா.. நாம் போய் snacks எதுவும் வாங்கி வரலாம்..” என்று அழைத்தான்.
“எஸ்.. கேப்டன்..” என்றபடி அவனோடு கிளம்பியவள், திரும்பி வரும்போது அர்ஜுனின் தலையில் அடித்துக் கொண்ட சலிப்போடும் , மகிமாவோடும் வந்தாள்.
ராகுல் அர்ஜுனிடம் “என்னடா.. ஆச்சு.. இவ்ளோ சலிப்பா வரே..”
“எல்லாம் உன் பாசமலர் அடிச்ச கூத்து தான்..”