அலுவலகத்தில் இருந்த உதய்க்கும் முதல் முறையாக நந்திதாவிடம் அப்படி பேசாமல் இருந்தது நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டே தான் இருந்தது...
அவள் இரவில் சாப்பிடவில்லை என்பது அவனுக்கு தெரியும்....
காலையில் அவன் வரும் வரை சாப்பிடவில்லை... அவன் கிளம்பிய பின் சாப்பிட்டிருப்பாளா???
போன் செய்தாலும் அவள் தான் எடுத்து பேச மாட்டாளே....!
ஆனால், அவ்வளவுக்கு அவன் மீது கோபம் இருந்தாலும், முன் தினமும், காலையிலும், அவள் அவ்வப்போது அவன் பக்கம் பார்த்தது அவனுக்கு ஒரு விதத்தில் இதமாக இருந்தது....
அவன் பக்கம் பேருக்கு கூட பார்க்காமல் இருந்தவளை, அவனின் கோபம் பார்க்க வைத்திருக்கிறதே... பரவாயில்லை...!
<
...
This story is now available on Chillzee KiMo.
...ஏன்?” என்றாள்.
“ம்ம்ம்ம்... நல்ல கேள்வி நதி! அதுக்கு முன்னாடி முன்னாடி முதல்ல கோவிச்சிட்டு இருந்தது நீ தானே?”
“அது ஏன்னு உங்களுக்கு தெரியாதா என்ன?”
“தெரியும்... ஆனால் நான் வேணும்னு செய்யலையே நதி... என் கிட்ட நீ அப்படி கோபமா இருந்தா தீயில கருகினது இல்லைன்னு ஆகிடுமா???”