(Reading time: 35 - 70 minutes)

வ்வளவு தூரம் அன்று ட்ராவல் செய்து வந்துமே அன்று இரவு ரியாவுக்கு ஏனோ தூக்கம் வரவிலை….

 “ஹேய் ஜி கே என்ன படுக்க வரலையா….?” ஒரு அறையிலிருந்த ம்யூசிக் சிஸ்டத்தை குடைந்து கொண்டிருந்த ரியாவை கூப்பிட்டான் விவன்.

“ம்ஹூம் தூக்கம் வரமாட்டேங்குது….” அரை சிணுங்கலாய் இவள் சொல்லும் போது இவளது பின் புறமாக வந்திருந்தான்.

“என்னாச்சு ரியு?”

“எல்லாம் உங்களாலதான்…” திரும்பி அவன் முகம்  பார்த்து இவள் சொன்ன இது முழு சிணுங்கல்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழ் என்று பேர்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“நான் இன்னும் ஒன்னுமே செய்யலையே…” கீழ் உதடை சற்றாய் கடித்தபடி குறும்பாய் அவன் சொன்ன விதத்தில் அதன் அர்த்தம் அடுத்த டைரக்க்ஷனில் பயணிக்க….

“ப்ச்…போங்க….” என முகம் சுளித்து சலித்த படி அடுத்த புறம் திரும்பி அந்த அட்டாக்கை சமாளித்தவள்….

” நல்லா டெய்லி கனவு வந்துச்சு….தூங்குறதே சூப்பர் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்துது….. இப்ப பாருங்க உங்கள நம்பி உங்க கூட தூங்கினேன்……. என்ன செய்தீங்கன்னு தெரியல…. ஒரு கனவையும் காணோம்…. தூங்க போர் அடிக்குது” என தன் பக்க கம்ப்ளெய்ன்ட்டை அவள் வாசிக்க….

கடந்த மூன்று நாட்களாய் அவள் கனவைப் பத்தி எதுவும் சொல்லாமல் இருந்த பொழுது சற்று யூகித்திருந்த விவனுக்கு……இது  ஹேப்பி கன்ஃபர்மேஷன்….

அவனைப் பொறுத்தவரை அவளுக்கு கனவு வரவில்லை எனில் மனதளவில் அவள் ரிலாக்‌ஃஸாகிவிட்டாள் என்று மட்டும்தான் அர்த்தம்…..  அவளை தூக்கி  தட்டாமாலை சுற்ற தோணியது அவனுக்கு அத்தனை அத்தனை சந்தோஷம்….

ஆனால் அது சரி வராதே….ஆக அவள் தோள் பற்றி தன் புறமாக திருப்பியவன்…..” ரொம்ப சந்தோஷமா இருக்குது ரியு…” என்றான் அவள் முகம் பார்த்து.

ரியாவைப் பொறுத்தவரை அவனிடத்தில் சொல்லாமல் இருக்க கூடாது என்பதற்காக இதை சொல்லி இருந்தாள்..… இது வெறும் மூனு நாள் gap…..திரும்ப வராதுன்னும் எதுவும் கிடையாது….

ஸ்டில் கனவு வரலைனா மனதளவில் அவனை இவள் முழுதாக ஏற்றிருப்பதாக உணர்வானே….. அந்த அவன் சந்தோஷத்தை கெடுக்க இவளுக்கு மனம் வரவில்லை…. சேம் டைம் ஃபால்ஸ் ஹோப் கொடுக்கவும் விருப்பம் இல்லை….

ஆக  கான்வர்சேஷனை வேறு வகையில் கன்டின்யூ செய்தாள். “ஆமா சார் உங்களுக்கு அப்டி சந்தோஷமாத்தான் இருக்கும்……பராக்கிரமரையே துரத்திட்டீங்களே….. ஆனா எனக்குதான் கதை இல்லாம போச்சு…. “  சோகம் போல் போலியாய் சலித்துக் கொண்டாள்.

“இப்ப என்ன என் ரியாக்குட்டிக்கு கதைதான வேணும்….நான் சொல்றேன்….” அவனும் கனவு டாபிக்கை விட்டு வெளிய வந்தான்.

அவர்கள் நின்றிருந்த ரூமிற்கு அடுத்துதான் அந்த ரூஃப் இல்லாத திறந்த வெளி ரூம்…. அங்கு ஓரமாக அமைந்திருந்த மாடி படிகளுக்கு அவளை  நடத்தியவன்….. ஒரு படியில் அவன் அமர்ந்து, அவனுக்கு கீழ் படியில் அவளை அமர்த்திக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.