(Reading time: 11 - 21 minutes)

ப்படி எல்லாம் இல்லடா..”என்று நடராஜன் பேச முயலும் பொழுதே,அவரை இடையிட்ட அஸ்வின்.., “நீ ஒன்னும் எனக்கு கல்யாணம் பண்ண சொல்ல வேண்டாம்..,எனக்கு அவங்களே நல்லப் பொண்ண பார்ப்பாங்க..,முதல நிச்சயம் பண்ண கல்யாணத்த நடத்துற பாரு..,உன்னாலாதன் வீட்டுல நிச்சயம் பண்ண மூணு கல்யாணமும் நடக்காம இருக்கு  ” என்றான்  அஸ்வின்.

“என்னால கல்யாணம் நடக்காம இருக்கா...,என்ன பிரச்சனை..,யாரோட கல்யாணம் ஆகாஷ் மாமா...”என்றுக் கேட்டாள் கவி.

“ அதுவந்து என்னோட கல்யாணம் தான்டா.., எனக்கு,சதீஷ்க்கு,உன்னோடஅ...அண்ணா சஞ்சீவ்க்கு...”என்றான் ஆகாஷ்.

“அப்படியா மாமா..,ரொம்ப சந்தோஷம் மாமா..,எதுக்கு இப்ப கல்யாணம் நடத்தாம தள்ளி வச்சி இருக்கீங்க...”என்றான் ஆகாஷ்.

ஆகாஷ் பதில் சொல்வதற்கு முன்பு, குறிக்கிட்டு பேசினான் அஸ்வின்.”மகாராணி வந்தாதான் கல்யாணம் பண்ணிபாங்கலாம் எல்லாரும்…”என்றான் அஸ்வின்.

“அஸ்வின் அவ கிட்ட ஏன்டா அப்படி பேசுற ...”என்றுக் கேட்டார் ஜனார்த்தனன்.

“அவ மட்டும் என்ன இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லலாம்.அதையெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டீங்க...,இப்படியே அவ மேல மேல அடமன்ட்டா இருக்க நீங்க தான்  காரணம்...”என்றுக் கூறியவனை முறைத்தவள் அவனை சட்டை செய்யாது,ஆகாஷை பார்த்து “நான் உங்க கல்யாணத்துக்கு வரேன் மாமா..,நீங்க ஏற்பாடு பண்ணுங்க..”என்றாள் கவி.

“நீ கல்யாணத்துக்கு கூப்பிட்டா  வருவனு எனக்கு தெரியாது பாரு..,நீ நிரந்தரமா வரணும் அதுதான் எனக்கு வேணும்..,நீயும்,அஸ்வினும் சேர்ந்து எங்க கல்யாணத்த நடத்தனும்..,நீ எங்க கூடத்தான் இருக்கணும் புரிதா இதுக்கு நீ ஒத்துக்கோ.., அடுத்த முகூர்த்தத்திலே  எங்க கல்யாணத்த வச்சிக்கலாம்..”என்றான்.

 “அடியே அழகே என்

அழகே அடியே

பேசாம நூறு நூறா கூறு போடாதே

வலியே வலியே என் ஒளியே

ஒலியே நான் ஒன்னும் பூதம்

இல்ல தூரம் ஓடாதே

காதோடு நீ எரிச்ச

வார்த்தை வந்து கீறுதே

ஆனாலும் நீ தெளிச்ச

காதல் உள்ள ஊறுதே

வாயாடி பேயா என் தூக்கம்

தூக்கி போற”

அதற்கான பதில்தான் அவகிட்ட இல்லாமல் போக ,அமைதியாக இருந்தால் அவள்.

 “கவிம்மா..,உன்னோட கோபம் எதுவா இருந்தாலும் அத நம்ப வீட்டுக்கு வந்து எங்ககிட்ட காமிடா..,இப்படி எங்களை விட்டு பிரிஞ்சி நீ கஷ்ட பட வேண்டாம்..”என்றார் நடராஜன்.

“அதுயெல்லாம் எனக்கு பழகிடிச்சு  மாமா.,நீங்க ஆகாஷ் மாமாவோட கல்யாணத்த நடத்துற வழிய பாருங்க..”என்றாள் கவி.

“மாமா சொல்றத கேளுடா..”என்று நாராயணன் மற்றும் ஜனார்த்தனன் இருவரும் சேர்ந்தே கூறினர்.அப்பொழுதும் எதுவும் கூறாமல் தலையை குனிந்துக்கொண்டாள் கவி.

அதனைப் பார்த்த அஸ்வினுக்கு தான் கோபம் அதிகமாக வந்ததது.அவளை அடிக்க கூடாது  என்று அவன் நினைத்ததால்..,அந்த அறையை விட்டு வெளியேறினான் அஸ்வின்.

“அஸ்வின் எங்க போற..”என்ற ஆகாஷின் கேள்விக்கு அஸ்வின் “நான் இனிமே இங்க இருந்தா அவள காயப்படித்திடுவேன் அதனாலதான் நான் இங்கே இருந்து போறேன். நீங்க அவகிட்ட பேசிக்கிட்டு வாங்க..”என்று அவன்கிட்ட கூறிவிட்டு  வெளியேறிவிட்டான் அஸ்வின்..

வன் வெளியேறுவதை ஒரு  இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அஸ்வின் வெளியேறியதும் ,ஆகாஷிடம் எவ்வளவு கூறியும் ஆகாஷின் மனதை மாற்ற முடியவில்லை.

தனது முடிவு அவ்வளவு தான் என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

ஆகாஷ் வெளிய சென்ற பின்பு அங்கு மற்றவர்கள் பேசியது எதுவும் அவளுக்கு காதில் விழவேயில்லை.

அனைவரும் அவளை வீட்டிற்க்கு வருமாரே அழைத்தனர்.

அவளது மனம் மிகவும் குழம்பிவிட்டது.அவளது மனதின் குழப்பம் அவளது முகத்தில் தெரிந்தது.

அவள் குழம்புவதை உணர்ந்த ஜனார்த்தனன் அவளது குழப்பம் தெளிவான முடிவை எடுக்க செய்யும் என்று நம்பினார்.

அதனால் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.