அஸ்வின் மனதோ ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.கவியை இப்பொழுதே பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அவனது மனது முழக்க யாபிக்க அவளது பிளாட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தான் அவன்.
கதவை அவன் திறக்க அது திறந்துக்கொண்டது,அனன்யா கதவை பூட்டாமல் விட்டு சென்றிருந்தாள்.
கதவு திறந்திருப்பதை பார்த்து ஒரு நிம்மதி அவனுள் பரவியது.தன்னவளை பார்க்க போகிறோம் என்ற நினைவே அவனை நிம்மதி அடையவைத்தது.
கவியின் அறைக்கு சென்றவன் அங்கு உறங்கிக் கொண்டிற்கும் அவளை பார்த்தான்.
அனைத்தையும் மறந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளின் அருகில் சென்றவன்,அவனும்,விஷ்வாவும் அடித்ததால் ஏற்பட்ட தடங்களை அவளது கன்னங்களில் கண்டான்.
அருகில் அமர்ந்தவன்,அவளது கன்னங்களை தனது கைகளால் வருடிவிட்டான்.அவனது மனதில் இருக்கும் வலியை யாரிடம் கூறுவான் அவன்.
அவளை அடித்தபொழுது அவளுக்கு ஏற்பட்ட வலியை விட அவனுள் ஏற்பட்ட வலிதான் அதிகம்.அவளது கன்னங்களை வருடிவிட்டவன்.உறங்கும் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“யார் சிரித்தாலும் பாலைவனங்கள்மலரும்
ஓ காதலா உன் பேர்
மௌனமா
சொல்லொன்று இல்லாமல்
மொழியும் காதலும் இல்லை
இல்லை உலகத்தில்ஓ....
காதலா ஒரு வார்த்தை சொல்லடா
முதல் வார்த்தை நீ சொன்னால்
நான் மறுவார்த்தை சொல்வேன் நான்
தினம் சொல்வேன் எந்தன் காதல்
சொல்வேன்
ஊடலிலும் அழியாமல் வாழும்
காதல் சொல்வேன்”
”ராட்சசி..,எதுக்குடீ இப்படி இருந்து தொலையுற..,உன்னை எப்படி பார்த்துக்கணும்னு நினைச்சேன்..” என்று அவளிடம் புலம்பி கொண்டிருந்தான்.
அவனது காதலை அவன் மட்டும் தான் அறிவான்.அவன் அவள் மீது வைத்துள்ள அன்பு அவளுக்கே புரியவில்லை எனும்போது மற்றவர்கள் எவ்வாறு புரிந்துக்கொள்வார்கள்.
அவளது தலையை கோதிவிட்டவன்.அவளது தலையணையிலே அவளது மூச்சுகாற்று தன் மீது படும் விதத்தில் படுத்திருந்தான்.
அவளை பார்த்தவாரே படுத்திருந்தவனுக்கு அவர்களது திருமணம் முதல் அவள் அவனை விட்டு பிரிந்தது வரையில் அனைத்தும் நினைவுகளில் வந்து சென்றது.
(இப்ப இல்ல fb next epiல தான் கவி நான் தான் சொல்லுவேனு சொன்னதால அஸ்வின் விட்டு கொடுத்துட்டாரு..)
வாங்க நாம அஸ்வின் ரிவைன்ட் பண்ணி பாக்குறதுகுள்ள நாம நம்ம பட்டாளத்த பார்த்திட்டு வந்திடலாம்
அந்த பூங்காவில் ஒரு வட்ட மேஜை மாநாட்டை போட்டிருந்தனர்.கவியின் நண்பர்கள்.அந்த மாநாட்டின் முடிவில் என்ன முடிவு எடுத்தார்கள்.
கவி குழப்பத்தில் என்ன முடிவு எடுப்பாள்...?
கவி-அஸ்வின் திருமணம் எவ்வாறு நடந்தது..?
அடுத்த எபில சொல்லுறேன் பிரண்ட்ஸ்...
தொடரும்
{kunena_discuss:1099}