"ஏ..வருண்!"
"விடுங்கண்ணா!அதான்,நீங்களும் கீதாவும் சீக்கிரம் வந்துட போறீங்கல்ல!ஆமா!அந்த விஷயம் என்னாச்சு?எப்போ ஊருக்கு வருவீங்க?"
-மனம் திடுக்கிட்டது அவனுக்கு!!
"மூணு மாசத்துக்கு மேலே ஆயிடுச்சுண்ணா!எப்போ வருவீங்க நீங்க?"
"மூன்று மாதங்கள் கடந்ததா?அதற்குள்ளாகவா?எனில்..."-அவன் மனதில் ஒருவித அச்சம் பரவியது.
"கீதாவை பார்க்காம அங்கே யாராலும் இருக்க முடியலை!"
"கவலைப்படாதே!சீக்கிரமே வந்துடுவா!"-அவன் குரல் உடைந்துப்போனது.
"அக்கா!"
"என்னடி?"
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்கா!"
"என்ன?"
"நீயும்,மாமாவும் உங்க கல்யாண வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கலை தானே!"-பட்டென கேட்டுவிட்டவளை அதிர்ச்சியாக பார்த்தாள் கீதா.
"2 நாளுக்கு முன்னாடி நீ சாப்பாடு பரிமாறும் போது,எதேர்ச்சையா உன் கை மாமா கை மேலே படும்போது அவர் தன்னோட கையை எடுத்துக்கிட்டதை பார்த்தேன்!"
"..............."
"நீ பண்றது தப்புக்கா!மாமா உண்மையிலே உன்னை காதலிக்கிறார்கா!உன்னை மட்டும் காதலிக்கிறார்!"
".............."
"அதனால தான்,உனக்காக காத்துக்கிட்டு இருக்கார்!ஒரு விஷயம் சொல்லட்டா,இதுவே அவர் உண்மையிலே உன்னை காதலிக்காம இருந்திருந்தா,ஒண்ணு உன்னை தூக்கி எறிந்துட்டு போயிருப்பார்.இல்லைன்னா,நீ இருக்கும் போதே இன்னொரு பொண்ணுக்கூட வாழ்ந்துட்டு இருந்திருப்பார்.அப்படியும் இல்லைன்னா,தன் விருப்பத்துக்காக உன்னை கட்டாயப்படுத்தி இருந்திருப்பார்!"-அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.
"புரிந்துக்கோக்கா!தனியா வாழலாம் தப்பில்லை.நீ,உன்னை தண்டிக்கிறதா நினைத்துட்டு உண்மையிலே எல்லாரையும் வேதனைப்படுத்துற!ஸாரிக்கா!தப்பா எடுத்துக்காதே!!"-மனம் கூறியவற்றை மறைக்காமல் பேசி முடித்தாள் அவள்.
"எனக்கு டைம் ஆயிடுச்சுக்கா!உனக்கும் தான்!"-அவள் தனது உடைமைகளை எடுத்து வெளியேறினாள்.
'ஆம்!அவள் கூறுவது முற்றிலும் உண்மை!சிவாவிற்கு இவள் மேல் மெய் அன்பு இல்லையெனில் நடந்திருந்திருப்பதே வேறு!அவளது சிறு உணர்வுகளுக்கும் மதிப்பளித்தான் அவன்.அவனிடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் நடப்பதே வேறாகி இருக்கும்.அவன் எத்தவறும் இழைக்கவில்லை அல்லவா??ஏன் அவன் தண்டனையை ஏற்க வேண்டும்??நானும் என்ன தவறிழைத்தேன்?என் கடந்த காலம் அது முடிந்த ஒன்று!!அது இனி என் வாழ்வில் எச்சூழலிலும் அவசியப்படாது!!"-நல்லதோர் முடிவு ஒன்றை எடுத்தது அவள் மனம்.ஆனால்,அது நீடிக்குமா??யார் அறிவார் விதியின் விளையாட்டை??
'இதுநாள் வரை,எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு எந்த எண்ணமும் வந்ததில்லை!எனக்காக வரப்போறவன்,ஏன்டா இத்தனை நாளா அதைப்பற்றி நான் யோசக்கலைன்னு என்னை வருத்தப்பட வைக்கிற மாதிரி இருக்கணும்!"-என்றோ ஓர் நாள் அவள் கூறியது நினைவில் எட்டிப் பார்த்தது.அவளது இதழோரம் மெல்லிய குறுநகைப் பூத்தது.காரணம்,அந்நிமிடம் அவள் சிந்தித்திருந்த வினாவே அது மட்டும் தான்!!!
தொடரும்
{kunena_discuss:1070}