(Reading time: 10 - 20 minutes)

"நான் கேட்டதால தானே நீ எல்லோருக்கும் சாக்லெட் சாப்பிட ஃபர்மிஷன் கொடுத்த!"

"அதுக்காக நிறைய சாப்பிட கூடாது!லிமிட்டா எடுத்துக்கணும்!"

"ஓ.கே!"-என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டாள் அச்சிறுமி.அவளிடமிருந்த இறுக்கங்கள் யாவும் தொலைந்துப் போயின.மனம் முழுதிலும் அவள் வெறுத்த அன்பானது தடையை உடைத்து வெளிவந்தது.

"நீ சிரித்தால் ரொம்ப அழகா இருப்ப!எனக்காக சாக்லெட் சாப்பிட அலொவ் பண்ண மாதிரி,இனிமே சிரித்துக்கொண்டே இரு ப்ளீஸ்!"-பாவமாய் கேட்டாள் அச்சிறுமி.

"முயற்சி பண்றேன்!"-என்றவள்,அக்குழந்தையை இறுக அணைத்துக்கொண்டு முத்தமிட்டாள்.

"என்னை பார்க்க என் ஃப்ரண்ட் வந்திருக்கான்!நான் போய் அவன் கூட விளையாடிட்டு வரேன் மாயா!"

"சரிம்மா!"-சிறந்த உபதேசத்தை அளித்தவள்,தென்றல் காற்றென மறைந்துப் போனாள்.

"நீ சிரித்தால் ரொம்ப அழகா இருப்ப மாயா!"-அவள் கூறியது மனதில் அசரீரியாய் ஒலிக்க,அவள் அறியாமல் ஒரு புன்னகை அவள் எழில் முகத்திற்கு அணியாய் வெளிவந்தது.

சில நொடிகள் தான்!மீண்டும் அவள் பிடிவாதம் உயிர்பெற,புன்னகையை அவசரமாய் மறைத்தவள் அங்கிருந்து எழுந்து சென்றாள்.

"மாயாவை பார்த்தியா?அழகா சிரிக்கிறா தானே!"-ஒரு விருட்சத்தின் மறைவிலிருந்து மாயாவின் சாந்த ரூபத்தை தரிசித்த ஹர்ஷா,தன் மன எண்ணத்தை உடனிருந்தவனின் பால் எடுத்துரைத்தாள்.இருந்தவன் யாருமில்லை!!ருத்ராவே!!

அவள் கூறியது அவனது செவிகளில் விழவில்லை!உறைந்துப் போயிருந்தான்!!

அவனறியாமல் அவன் மனதில் அவள் பிம்பம் பதிந்தது..

"இவ சிரிக்கும் போது உண்மையிலே ரொம்ப அழகா இருக்கா!"-தன்னையறியாமல் கூறினான் ருத்ரா.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.