(Reading time: 18 - 35 minutes)

மனதுக்குள்தான் வைய முடியும். வாய்விட்டு சொல்லிவிட்டு அவரால் நிம்மதியாக இருந்துவிட முடியாது.

உள்ளே நுழைந்ததுமே அவ்வளவு நேரம் சவடால் விட்டுக்கொண்டிருந்த தந்தையைக் காணவில்லை என்றதுமே அக்கா தங்கை இருவரின் முகங்களுமே ஏளனத்தைக்காட்டின.

‘கோழை!’ என்று முணுமுணுத்தாள்.

ஜெயசுதா மகளை ஆவலே வடிவாக நோக்க மகளோ அவளை முறைத்தாள்.

“அம்மா! நம்ம தகுதிக்கு மீறின மாப்பிள்ளையை யார் உங்களை பார்க்க சொன்னது?”

திருமணத்தை தடுத்து நிறுத்த ஒரு வழி கிடைத்ததே என்ற எண்ணத்தில் தாயிடம் கோபத்தைக் காண்பித்தாள்.

தாயை பேசவிடாமல் அவளுக்குப் பதிலை வண்ணமலர் சொன்னாள்.

“வரதட்சணை கேட்கலைன்னா மட்டும் அந்த மாப்பிள்ளையை குறை சொல்றதை விட்டுடுவாங்களா? அவனுக்கு என்ன குறையோ? இல்லை தீராத வியாதியோ? அதுதான் ஒன்னுமே வ

...
This story is now available on Chillzee KiMo.
...

டுத்து பிறந்த அவளை சீண்ட ஆளில்லாது போனபோது அவளேதானே மகளைக் கொஞ்சி சீராட்டினாள்.

அப்போது வைத்த செல்லப்பெயர் அது. அவள் மட்டும்தான் அப்படி அழைப்பாள்.

அடுத்தடுத்த மகள்களுக்கும் மலர் என்று முடியுமாறு பெயர் வைத்ததால் நேசமலருக்கு அடுத்தவளை கொடி என்றும் இளையவளை மலர் என்றும் அழைப்பாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.