(Reading time: 10 - 19 minutes)

"நிஷாந்த்!"

".............."

"ஆபிஸ் தான் வரேன்!டாகுமண்ட் ரெடியா?"

"..............."

"குட்!மீட்டிங் அரெஞ்ச் பண்ணு!15 நிமிடத்தில் வந்துடுவேன்!"-என்று இணைப்பைத் துண்டித்தாள் மாயா.என்றுமில்லாமல் அந்த நெடுஞ்சாலையில் நிசப்தம் பெருமளவு குடிக் கொண்டிருந்தது!!

பயணத்தில் இருந்தவரின் கைப்பேசி மீண்டும் ஒலிக்க அதனை உயிர்ப்பித்தாள்.

"மாயா மகேந்திரன்!"

"............"

"ஹலோ!"

"............."

"யாரது?"

"கோபத்துல கூட அழகா பேசுறீயே செல்லம்!"-ருத்ராவின் குரல் கேட்டதும் திடுக்கிட்டாள் அவள்.

"உன் கூட பேசாம!சண்டை போடாம நிம்மதியாகவே இல்லை!அதான் அர்ஜூன்கிட்ட இருந்து நம்பரை வாங்கி போன் பண்ணிட்டேன்!"

"வாங்கினீயா?எடுத்தியா?"

"ஐயோ!ரொம்ப புத்திசாலி நீ!எடுத்தேன் தான்!"-சட்டென இணைப்பை துண்டித்தாள் அவள்.

சில நொடிகளில் மீண்டும் அழைப்பு வந்தது.

"என்ன வேணும் உனக்கு?"

"ஒருமுறை கோபமா பேசு!"

"ராணா!நீ யார்கிட்ட விளையாடுறோம்னு தெரியாம விளையாடுற!"

"தெரிந்துக்கலாம்!"

"என் நேரத்தை வீணாக்காதே!"-கைப்பேசியில் சண்டையிட்டப்படி இருந்தவளின் காரில் திடீரென தன் பக்கமாக பெரும் நிழல் வேகமாக வருவதை உணர்ந்து சுதாரிப்பதற்குள்,அவள் காரை இடித்து தள்ளியது ஒரு லாரி.

"ஆ..!"என்ற அலறல் சத்தத்தோடு எங்கோ போய் மோதியது அவள் கார்.

"மாயா!"-அதிர்ந்துப் போய் கத்தினான் ருத்ரா.

ஆழ்ந்த மயக்கத்திற்கு தள்ளப்பட்டவள்,தலையில் பலத்த காயத்தோடு சரிந்தாள்.அவள் கழுத்தில் அணியப்பட்டிருந்த உருத்திர மாலை எதிலோ சிக்கி அறுந்து சிதறியது!!!

தொடரும்

Episode # 14

Next episode will be published as soon as the writer shares her next episode

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.