"நிஷாந்த்!"
".............."
"ஆபிஸ் தான் வரேன்!டாகுமண்ட் ரெடியா?"
"..............."
"குட்!மீட்டிங் அரெஞ்ச் பண்ணு!15 நிமிடத்தில் வந்துடுவேன்!"-என்று இணைப்பைத் துண்டித்தாள் மாயா.என்றுமில்லாமல் அந்த நெடுஞ்சாலையில் நிசப்தம் பெருமளவு குடிக் கொண்டிருந்தது!!
பயணத்தில் இருந்தவரின் கைப்பேசி மீண்டும் ஒலிக்க அதனை உயிர்ப்பித்தாள்.
"மாயா மகேந்திரன்!"
"............"
"ஹலோ!"
"............."
"யாரது?"
"கோபத்துல கூட அழகா பேசுறீயே செல்லம்!"-ருத்ராவின் குரல் கேட்டதும் திடுக்கிட்டாள் அவள்.
"உன் கூட பேசாம!சண்டை போடாம நிம்மதியாகவே இல்லை!அதான் அர்ஜூன்கிட்ட இருந்து நம்பரை வாங்கி போன் பண்ணிட்டேன்!"
"வாங்கினீயா?எடுத்தியா?"
"ஐயோ!ரொம்ப புத்திசாலி நீ!எடுத்தேன் தான்!"-சட்டென இணைப்பை துண்டித்தாள் அவள்.
சில நொடிகளில் மீண்டும் அழைப்பு வந்தது.
"என்ன வேணும் உனக்கு?"
"ஒருமுறை கோபமா பேசு!"
"ராணா!நீ யார்கிட்ட விளையாடுறோம்னு தெரியாம விளையாடுற!"
"தெரிந்துக்கலாம்!"
"என் நேரத்தை வீணாக்காதே!"-கைப்பேசியில் சண்டையிட்டப்படி இருந்தவளின் காரில் திடீரென தன் பக்கமாக பெரும் நிழல் வேகமாக வருவதை உணர்ந்து சுதாரிப்பதற்குள்,அவள் காரை இடித்து தள்ளியது ஒரு லாரி.
"ஆ..!"என்ற அலறல் சத்தத்தோடு எங்கோ போய் மோதியது அவள் கார்.
"மாயா!"-அதிர்ந்துப் போய் கத்தினான் ருத்ரா.
ஆழ்ந்த மயக்கத்திற்கு தள்ளப்பட்டவள்,தலையில் பலத்த காயத்தோடு சரிந்தாள்.அவள் கழுத்தில் அணியப்பட்டிருந்த உருத்திர மாலை எதிலோ சிக்கி அறுந்து சிதறியது!!!
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her next episode
{kunena_discuss:1104}