(Reading time: 6 - 12 minutes)

கண்ணை மூடி சீட்டில் சாய்ந்தவள் அப்படியே உறங்கிவிட்டாள். அவள் உறங்கிய  பின் அவளை பார்த்த அஸ்வினது மனதில் எதுவோ ஒரு உணர்வு வந்தது. அது என்ன உணர்வு என்று அவனுக்கு தெரியவில்லை.அவளது குழந்தை.போன்ற முகமே அவனைக் கட்டிப் போட்டது. அவளை பார்த்துக் கொண்டே அவனும் உறங்கி விட அதுவரை கண்ணாடி வழியே அவனை பார்த்துக் கொண்டிருந்த சதீஷின் உதட்டில் புன்னகை உறைந்தது. அவர்களது கார் அன்னூரை சென்று அடைந்திருந்தது,கார் வீட்டை அடைந்ததும் அஸ்வினை எழுப்பி விட்டான் சதீஷ்.

தூக்கத்தில் இருந்து எழுந்தவன் இன்னும் அருகில் குழந்தைப் போல் தூங்குபவளை பார்த்தான். கார் நின்றதுக் கூட தெரியாமல் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவன் அவளை பார்ப்பதை பார்த்த சதீஷ்,”மச்சான்..,தங்கச்சியை எழுப்பிக் கூட்டிக்கிட்டு வா” என்றுக் கூறி விட்டுச் சென்று விட ,அவளை அவன் எப்படி கூப்பிடுவது என்று  தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.தாலிக் கட்டி பல மணி நேரங்களைக் கடந்திருந்தும் அவளது பெயர் கூட அவனுக்கு தெரியவில்லை.

அவளை அவன் தட்டி எழுப்ப எழுந்தவள் முதலில் அவன் முகம் பார்த்து  முழித்தவள்,பின்பு சுதாகரித்து எழுந்தாள்.

“ இறங்கி வா..”என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் இறங்கியவள்.அவன் பின்னாலே நடந்து சென்றாள்.அவன் வீட்டிற்குள் செல்ல போக அவனை தடுத்த சதீஷ்.

”தாத்தா உன்ன இங்கயே வைட் பண்ண சொன்னாரு...”என்றுக் கூற அங்கேயே அவன் நின்றான்.

வீட்டிலிருந்து வெளியில் வந்த நடுத்தர வயது பெண்மணி அவர்களுக்கு ஆலம் அவர்களுக்கு அவர் பொட்டு வைத்து விட்டு அவர்களை உள்ளே போக சொன்னார்.

உள்ளே அவள் செல்லும் பொழுதே அந்த வீட்டில் இருக்கும் கூட்டத்தை பார்த்து அவளுக்கு பயம் தான் வந்தது.

உள்ளே வந்த அவர்களை  ஒரு பெண்மணி உட்கார வைத்து பாலும் பழமும் கொடுக்க, வந்திருந்தக் கூட்டம் ஒரு வழியாக குறைய தொடங்கியது.

கூட்டம் குறைந்த உடன் அவள் அருகில் அமர்ந்தவன் எழுந்து சென்று விட அந்த இடத்தை விட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் அவள் அமர்ந்திருந்தாள்.வீட்டில் இருப்பவர் ஒருவரையும் அவளுக்கு தெரியவில்லை.இயற்கை உபாதை வேறு வந்து தொல்லை தர என்ன செய்வது என்று தெரியாமல் அவள் முழித்துக் கொண்டிருக்க,கோவிலில் அவள் அருகில் வந்து அழைத்த அதே பெண் அவளது அருகில் வந்தாள்.

“வாங்க என் கூட..”என்று அவளை ஒரு அறைக்கு அழைத்து சென்றவள்.அவளுக்கு பாத்ரூம் இருந்த இடத்தை காட்டினாள்.

அவளுக்கு நன்றிக் கூறிவிட்டு கவி பாத்ரூம் சென்றாள்.

முகத்தைக் கழுவிக் கொண்டு அவள் வெளியில் வருவதற்குள் அந்த பெண் காபி எடுத்துக் கொண்டு  வந்திருந்தாள்.

வெளியில் வந்த அவளிடம் ஒரு கோப்பையை தந்தவள் தானும் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டுக்  குடிக்க ஆரம்பித்தாள்.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.