மெதுவாய் மாடிபடியேறியவள் கதவின் தாழ்பாளில் கைவைக்க சரியாய் உள்ளிருந்து கார்த்திக் கதவை திறந்தான்..வாங்க மேடம் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க??
சாரி மாமா ரொம்ப லேட் ஆய்டுச்சா..ஸ்வீட்டி அப்போவே ரெடி ஆக சொன்னாங்க நாதான் லேட் ஆக்கிட்டேன்..என்றவாறு டேபிளில் பாலை வைத்துவிட்டு திரும்ப கார்த்திக் கதவை தாளிட்டு திரும்பினான்..
அழகான லைட் எல்லோ நிற க்ரீப் புடவையில் துளியும் ஒப்பனையின்றி மனதின் பூரிப்பும் பதட்டமும் அவள் அழகுக்கு அழகேற்றியிருக்க அவளிடமிருந்து விழியகற்றாமல் அருகில் வந்தான்…கைப்பற்றி அவளை தன்புறம் இழுத்தவன்,லுக்கிங் கார்ஜியஸ் டீ பொண்டாட்டி..ஆனா ஏன் தேவையில்லாத உனக்கு செட் ஆகாத ஒரு பயம் பதட்டம் உன்கிட்ட இருக்கு அதுமட்டும் போய்டுச்சுன்னா ஆசம் ஆய்டுவ..
அவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கன்னத்தின் சிவப்பு கூடிக் கொண்டே போவதாய் உணர்ந்தாள்..அது அது வந்து தெரில மாமா பட் ஒருமாறி நெர்வஸாயிருக்கு..தொண்டையெல்லாம் ஒருமாறி..என திக்கி திணறி பேச அருகிலிருந்த பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான்..
மறுப்பேதும் கூறாமல் அதைவாங்கி குடித்தவளுக்கு மனம் சற்று நிதானமடைந்ததாய் தோன்றியது..ஒன்றும் பேசாமல் அருகில் அமர்ந்தவன் சட்டென அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்..ஆதரவாய் அவள் முன்தலையை வருடியவாறே அவன் அமைதியாய் இருக்க சில நிமிடங்களில் தன் இயல்புக்கு திரும்பியவள் சாய்ந்தவாறே அவனை ஏறிட்டு பார்க்க.சிறுபுன்னகையோடு தன் கன்னத்தால் அவள் தலையில் இடித்தான்..
அவனிடமிருந்து நிமிர்ந்து அமர்ந்தவளிடம்,என்ன சஹிம்மா நார்மல் ஆய்டியா??எதுக்கு இவ்ளோ டென்ஷன் உன் வீடு உன் ரூம் எல்லாத்துக்கும் மேல உன் கார்த்திக்..இப்படி பயப்படுறதுக்காகவா என்ன விரட்டி விரட்டி லவ் பண்றேன்னு சொன்ன???
மாமா என சிணுங்கியவள் அவனின் சிரிப்பில் தன்னை மறந்தாள்..லவ் யூ சோ மச் மாமா என அவன் கண்களுக்குள் பார்த்து கூற,வாய்திறக்காமல் தன் கைகளை விரித்து தன்னவளை அழைக்க கூடு கண்ட பறவையாய் அவனுள் சேர்ந்து கொண்டாள்..இறுக்கமாய் அணைத்து அவளை விடுவித்தவன் முகமெங்கும் முத்தங்களால் நினைக்க இறுதியில் இதழோடு இதழ் சேர்த்து இணைந்தான்..அவன் பிடி தளர்ந்ததை உணர்ந்தவள் கண்திறந்து அவன் முகம் பார்க்க கண்களில் கண்ணீர் சேர்ந்திருந்தாய் தோன்றியது..
அதை தாங்க மாட்டாதவளாய் அவன் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டாள்..மாமா என்னாச்சு மாமா ஏன் அழற??நா உனக்கு ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேனா மன்னிச்சுரு மாமா..
அதற்குள் சுதாரித்திருந்தவன் ஹே சஹி அதெல்லாம் ஒண்ணுமில்லடா சந்தோஷத்துல தான் கண்ணீர் வந்துருச்சு.யார் மனசும் நோகாம எந்த ப்ரச்சனையும் இல்லாம உன்ன பத்திரமா என்கூட கூட்டிட்டு வந்துட்டேன்ல அந்த சந்தோஷம்தான்..மத்தபடி ஒண்ணுமில்ல..நா ரொம்ப ஹேப்பியா இருக்கேன்..இனி சஹி 100 இல்ல 200% என் பொறுப்பு..
மாமா நிஜமா சொல்லனும்னா எல்லாமே கனவுமாறியிருக்கு நீ சொல்றமாறி யாரும்அப்போஸ் பண்ணாம ப்ராப்ளம் இல்லாம ஸ்மூத்தா வெட்டிங் முடியுரது ரொம்ப ரொம்ப பெரீய விஷயம்தான்..அதுவும் நேத்து பல்லக்குலா பாத்தவுடனே க்ரண்ட் வெட்டிங் பீல் வந்துடுச்சு..
உண்மைதான் சஹி..அவங்க நம்ம வெட்டிங்க இன்னும் ஸ்பெஷல் ஆக்கிட்டாங்க…ஹே நீ சொன்னவுடனே தான் நியாபகம் வருது இத எங்க மாட்டலாம்நு சொல்லு என்றவாறு எழுந்து சென்று காலையில் ஷரவன் எடுத்த அந்த பெரிய ப்ரேமை எடுத்து வந்தான்..மாமா இங்க மாட்டலாம் அப்போதான் காலைல எழுந்துக்கும் போதும் சரி தூங்கபோகும் போதும் சரி நாம அத பாக்குறதுக்கு நல்லாயிருக்கும்..
ஓ.கே எஜமானியம்மா தங்கள் உத்தரவு என்றன் சிரித்தவாறே அங்கிருந்த நாற்காலியில் ஏறி அதை மாட்டிவிட்டு இறங்கினான்..
சரி சஹிம்மா நீ தூங்கு காலைல சீக்கிரமே எழுந்துருப்ப..நாளைக்கு உங்க வீட்டுக்கு வேற போகணும் இல்ல ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து படுத்துக்கோடா என கூற தன்னவன் மேல் அதிகரித்த காதலோடு சென்று உடைமாற்றி வந்து அமர்ந்தாள்..அதற்குள் இரவு உடைக்கு மாறியிருந்தவனும் வந்து கட்டிலில் அமரஅவனையே பார்த்திருந்தவளை பார்த்து,என்ன பேபி தூக்கம் வரலையா??என கிண்டல்யாய் கேட்க தாமரையாய் முகம் மலர்ந்தவள் அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்..கொஞ்ச நேரம் படுத்துக்குறேன் மாமா..
தூங்கு சஹிம்மா..என நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தவன் பின் சாய்ந்தமர்ந்து தலைகோத சில நிமிட உரையாடல்கள் சீண்டல்கள் என தன்னையறியாமல் அவன் மடியிலேயே கண்ணயர்ந்திருந்தாள்..எந்தவித சலனமுமின்றி தன் மடி சேர்ந்திருந்தவளை பார்த்தவனுக்கு தன் குழந்தையை மடியில் ஏந்திய உணர்வு வந்திருந்தது..கூடிய விரைவில் தேவிகாவின் ஆசையை நிறைவேற்றி சஹியை முழுமையாய் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமென மனதில் உறுதி கொண்டவன் அவள் உறங்கியதை உறுதிப்படுத்திக் கொண்டு அவளை அருகில் படுக்க வைத்து தானும் கண்ணயர்ந்தான்..
அதிகாலையிலேயே கண்விழித்தவள் தன்னை அணைத்தவாறு தூங்குபவனின் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் அப்படியே படுத்திருந்தாள்..கம்பீரமாய் தூக்கத்தில்கூட அத்தனை ஆளுமை அவனிடத்தில்.