Veesum kaatrukku poovai theriyaatha - Tamil thodarkathai
Veesum kaatrukku poovai theriyaatha is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
பெண்களிடம் இருந்து விலகியே இருக்கும் ஷிவா, பெற்றோர் பார்த்து அவனுக்காக நிச்சயித்த அருந்ததியை விரும்பி மணக்கிறான்.
ஷிவாவின் அம்மா, அப்பா, அக்கா என அனைவருடனும் இயல்பாய் அன்பாய் பழகும் அருந்ததி, ஷிவாவிடம் மட்டும் விலகியே இருக்கிறாள். ஏன், என்ன என்று புரியாமல் குழம்புகிறான் ஷிவா.
அவனுடைய கேள்விக்கு பதில் கிடைத்ததா? அருந்ததியின் மனதில் இருக்கும் குழப்பம் என்ன?
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 01 - பிந்து வினோத்
அவன் ஒன்றும் ஆசைகளை துறந்த முனிவன் அல்ல! பூமியை எழுபது சதவிகிதம் உள்ளடக்கி இருக்கும் கடல் நீரை விட பெரிய அளவில் மனதில் ஆசைகள் உள்ளவன்! பொதுவாக பெண்களை விட்டு தள்ளி நின்றாலும் பெண்ணின் மீது பற்றே இல்லாதவன் அல்ல! தனக்கென ஒருத்தி வரும் நாளுக்காக, அவளிடம் மட்டுமே அந்த அன்பை, ஆசையை
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 02 - பிந்து வினோத்
தன்னையே அந்த கதாநாயகியின் இடத்தில் வைத்து பார்த்தாள். அவளுடைய திருமணமும் இப்படி தான் இருக்குமா? எங்கிருந்து வருவான் அந்த அழகன்? மனதில் தோன்றிய கனவுடன், ஆசை, ஆவல், வெட்கம் என எல்லாம் போட்டி போட்டு துணை வந்தது. தொடர்ந்து சிடி ப்ளேயரில் பாடல் பாடிக் கொண்டிருந்தது!
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 03 - பிந்து வினோத்
“அப்போ என் சித்தி தான் உங்க ஃபிரெண்ட்! வாங்க, உள்ளே வந்து உட்காருங்க, நான் சித்தியை கூப்பிடுறேன்.”
“சரிம்மா...” என்றாள் லக்ஷ்மி வாஞ்சையுடன்.
பிறந்த ஊருக்கு பல வருடங்களுக்கு பின் வந்திருப்பது அவளின் மனதை நெகிழ்த்தி இருந்தது. அங்கே அருந்ததி வாயிலாக கிடைத்த முதல் வரவேற்பு
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 04 - பிந்து வினோத்
“ஆமாம், என் பேர் அருந்ததி!” என்று சொல்லி புன்னகைத்தாள் அருந்ததி.
அந்த சின்ன புன்னகையில் அழகுற மின்னிய அவளின் முகத்தை எந்த வித பொறாமையும் இல்லாமல் பார்த்து ரசித்தாள் ராதிகா.
“எனக்கு எங்க அம்மா அப்பா பேரு வச்ச ஸ்டைலை பார்த்து சித்தியும், சித்தப்பாவும் தங்கைகளுக்கும் பேர் செலக்ட்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 05 - பிந்து வினோத்
“அவளுக்கு கல்யாணத்திற்கு நீங்க தான் பார்க்கனும்ல?”
“ஆமாம், போன வருஷமே பார்க்கலாம்னு நினைச்சேன், இவர் தான் ஒத்தை வயசில தான் நல்லது செய்யனும்னு தள்ளி போட்டார். போன வாரம் தான் ஜாதகத்தை எடுத்து வச்சேன், நல்ல பையனா பார்த்து பேசி முடிக்கனும்.”
“ரொம்ப தங்கமான பொண்ணு.”
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 06 - பிந்து வினோத்
அருந்ததியுடன் ஒரு முறையேனும் பேசி விட வேண்டுமென்று மனதினுள் ஆசையுடன் இருந்தான் ஷிவா. நிச்சயதார்த்ததிற்கு பிறகு, உணவு உண்ணும் போது மட்டுமே அவனால் அவளை கண்ணில் பார்க்க முடிந்தது! அதன் பின் மாய மோகினியாக அவனின் கண்ணில் தோன்றாமல் மறைந்து போனாள்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 07 - பிந்து வினோத்
“என்ன தண்டனை தரலாம்?”
அவன் போலியாக யோசிப்பது போல் பாவனை செய்தபடி தவிப்புடன் நின்றிருந்தவளை பார்த்தான்.
“சரி, சின்ன பொண்ணு சின்ன தண்டனை தரேன். நேத்து நான் உனக்கு கொடுத்ததையே நீ எனக்கு கொடு, போதும்!”
அருந்ததி அதிர்ந்து போனாள்!
“அதெல்லாம் தப்பு, கையை விடுங்க.”
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 08 - பிந்து வினோத்
“என்ன ம்மா? என் கிட்ட சொல்ல என்ன தயக்கம், சொல்லு!”
“அவர் வந்து என் பக்கத்தில வந்து...”
முகம் சிவந்து சொல்ல தடுமாறியவளை பார்த்து சிரித்தாள் பிரேமா.
“ராதிகா காலையிலே நடந்த கூத்தை என் கிட்டேயும் லக்ஷ்மி கிட்டேயும் சொன்னாள். உன் மேல ஷிவாக்கு எவ்வளவு
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 09 - பிந்து வினோத்
மனதை கவர்ந்த பெண்ணின் பார்வைக்கு தான் எப்பேர் பட்ட சக்தி இருக்கிறது! ரதி அவனை நேராக பார்ப்பதே அரிது, அப்படியே பார்த்தாலும் கெஞ்சும் பாவனை தான் பெரிதும் இருக்கும்! முதல் முதலாக அந்த வட்டத்தினுள் இருந்து வெளியே வந்து அவள் பார்த்த அந்த காந்த பார்வை அவனை திக்குமுக்காட செய்திருந்தது. அவளுக்காக மலையை
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 10 - பிந்து வினோத்
ஆனால் காதல் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஷிவாவின் முத்தங்களுக்கு முன் அந்த வார்த்தைகள் எதற்குமே வடிவம் கூட உருவாகமால் போனது! தன் மனைவிக்காக மட்டுமே என ஷிவா வளர்த்து வைத்திருந்த காதல் ஆசை எனும் காட்டாற்று வெள்ளமாக வெளிப்பட்டது... ஆனால் அந்த காதலை அருந்ததி ஏற்றுக் கொள்கிறாளா என்பதை தான் அவன்
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 11 - பிந்து வினோத்
ஷிவாவிற்கே இந்த உறவின் ஆதிக்கம் வியப்பாக இருந்தது! உலக அழகியாக இருந்தாலும் கூட அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக அவன் வைத்திருந்த மனதை எத்தனை எளிதாக ஒரே பார்வையில், ஒரே சிரிப்பில் வென்று விட்டாள் இவள்! இவள் மனம் வருந்தக் கூடாது! முகம் வாடக் கூடாது என என்னமாக தவிக்கிறது இவனது மனது!
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 12 - பிந்து வினோத்
“ஹாய் க்யூட்டி, தனியா உட்கார்ந்து என்ன செய்ற? எங்கே உன் ஹீரோ?” என்று தனியாக அமர்ந்திருந்த அருந்ததியிடம் வினவினாள் ராதிகா.
“லேப்டாப்ல ஏதோ செஞ்சுட்டு இருக்கார்!” என்றாள் அருந்ததி யோசனை கலக்க!
“என்னதிது! அவன் கல்யாணத்துக்கு
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 13 - பிந்து வினோத்
“காதல் காவியங்களை சினிமாவில் பார்த்திருக்கேன், டிவியில் பார்த்திருக்கேன், பக்கத்து வீட்டில பார்த்திருக்கேன், எதிர் வீட்டில பார்த்திருக்கேன், ஏன் பஸ் ட்ரெயின்ல கூட பார்த்திருக்கேன், இப்படி வீட்டில கண் முன்னாடி பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை! என்னா லவ்வுடா இது!!!!”
ராதிகா ஒருவழியாக சிரிப்பை
... -
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 14 - பிந்து வினோத்
சட்டென்று ஷிவா மனதில் பல்ப் எரிந்தது! அருந்ததி தெள்ளத் தெளிவாக தான் சொல்லி இருக்கிறாள்! அவனுக்கு தான் புரியவில்லை! இனி அடுத்து என்ன செய்வது என யோசிக்க துவங்கினான்!
-
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 15 - பிந்து வினோத்
"உங்களை யாருக்குப் பிடிக்காமல் போகும்?"
இதை ஷிவா பலர் சொல்ல கேட்டிருக்கிறான், லக்ஷ்மி, ராதிகா, நாதன் என்றில்லாமல், நண்பர்கள், அலுவலகத்தில் தெரிந்தவர்கள் என எத்தனையோ பேர்... ஆனால், இன்று மனைவியின் வாயால் அதைக் கேட்ட போது அடைந்த அந்த மகிழ்ச்சி வேறு எப்போதும் ஏற்பட்டதில்லை.
Page 1 of 5