குழந்தைகள் ஸ்பெஷல் குட்டிக் கதைகள் – 83. நாணல்
ஒரு பெரிய ஆற்றின் கரையோரம், ஒரு பெரிய மரம் இருந்தது.
அந்த ஆற்றை சுற்றி பல நாணல்களும் இருந்தன.
மரத்திற்கு தான் நாணலை விட வலிமையானவன் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது.
"நான் புயல் அடித்தாலும், வெயில் அடித்தாலும் நிமிர்ந்து நிற்கிறேன். ஒவ்வொரு முறை காற்று வீசும் போதும் நான் பயத்தில் தலை குனிய மாட்டேன். ஆனால் இந்த நாணல்கள் எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன! மெல்லிய காற்றடித்தால் கூட இப்படி வளைந்து ஆடுகின்றன!" என்று மரம் நாணலை பற்றி குறைவாக பேசியது.
அன்றிரவு பயங்கர புயல் வீசியது!
வலிமையான மரம் வேரோடு சாய்ந்தது.
நாணல்களோ புயல் காற்றுக்கு ஏற்ப வளைந்து கொடுத்ததால், எந்த பாதிப்பும் இல்லாமல் நிலைத்து நின்றன!
கருத்து:
வறட்டு பிடிவாதத்துடன் நின்று அழிந்துப் போவதை விட, வளைந்து, விட்டுக் கொடுத்து வாழ்வது சிறப்பு.