Chillzee சமையல் குறிப்புகள் - பாதாம் பன்னீர்
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.
இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள்
200 கிராம் பன்னீர்
¼ கப் பாதாம்
1 வெங்காயம்
1 தக்காளி
1 இன்ச் இஞ்சி
1 டீஸ்பூன் சோம்பு
2 ஏலக்காய்
4 கிராம்பு
½ டீஸ்பூன் சீரக தூள்
½ டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
சிட்டிகை சர்க்கரை
கொத்தமல்லி
நறுக்கிய பாதாம்
உப்பு
எண்ணெய்
செய்முறை
பாதாமை சில மணி நேரம் ஊறவைத்து, அதன் தோலை அகற்றவும்.
பன்னீரை சின்ன துண்டுகளாக (க்யூப்ஸ்) வெட்டுங்கள். பின்னர், வெட்டிய பன்னீருடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கலக்குங்கள்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சூடாக்கி, பன்னீர் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதை ஓரமாக ஒதுக்கி வைக்கவும்.
அதே வாணலியில், 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சோம்பு, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்க்கவும்.
அடுத்து, பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். உப்பு, மீதமுள்ள மஞ்சள் மற்றும் சர்க்கரையையும் சேர்க்கவும். வெங்காயம் பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.
பின் ஸ்டவ்வை அணைத்து விடவும்.
வதக்கிய வெங்காயத்தை ஆற வைத்து, தக்காளி மற்றும் ஊற வைத்த பாதாம் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைக்கவும்.
அரைத்த பேஸ்டை மிதமான தீயில் மீண்டும் அதே வாணலியில் மாற்றி கலக்குங்கள்.
அதனுடன் சீரக தூள், கொத்தமல்லி தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும். தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.
பின், வறுத்த பன்னீர் மற்றும் ½ கப் தண்ணீரை சேர்க்கவும். கொதிக்க விட்டு, உப்பு சரி பார்த்து இறக்கி விடவும்.
நறுக்கிய கொத்தமல்லி மற்றும் நறுக்கிய பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.