(Reading time: 2 - 4 minutes)

வீட்டுக் குறிப்புகள் - 41 - சசிரேகா 

புளியை வாங்கியதும் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க அதை போட்டு வைக்கும் ஜாடி அல்லது ப்ளாஸ்டிக் டப்பாக்களில் முதலில் ஒரு லேயர் புளியை போடவும் அதன் மேல் கல் உப்பு சிறிது தூவி அதன் மேல் புளியை ஒரு லேயராக போட்டு அதன் மேல் கல் உப்பு சிறிது தூவி  வைத்தால் புளி நீண்ட நாள் பூச்சிகள் அண்டாமலும் கெடாமலும் இருக்கும்

தேங்காய் உடைத்து துருவும் போது கொட்டாங்கச்சியின் மேல் உள்ள நார்கள் தூசுகள் துருவலில் கொட்டும் அதைப் போக்க தேங்காய் உடைத்ததும் மூடிகள் இரண்டையும் தண்ணீரில் சிறிது நேரம் நனைத்து வைத்து பிறகு துருவினால் அந்த நார் எல்லாம் உதிராது. துருவலும் சுத்தமாக இருக்கும்

ச்சை மிளகாயை ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைக்காமல் நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்தால் அதிலுள்ள ஈரம் காய்ந்துவிடும் பின் அதை காகிதப் பையில் போட்டு வைத்தால் 15 நாள் வரை புதிதாகவே இருக்கும் ப்ளாஸ்டிக் கவரில் ஈரம் காயாமல் மிளகாய் அழுகும்

ல் துலக்கும் பிரஷை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுவதாலும் பிரஷை வெயிலில் உலர்த்தி வைத்தாலும் கிருமி தொற்றை தடுக்கலாம்

த்திரிக்கோலை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்தால் துரு பிடித்துவிடும் அதை தடுக்க கத்திரியின் மீது வெங்காய சாறை தடவி வைத்தால் துரு பிடிக்காது.

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.