(Reading time: 1 - 2 minutes)

ஏசி அறையில் மல்லிகை வாசனை - சுதாகர் 

தடை விதிக்கப்பட்ட பகுதி

 

காற்றுக்கு தடை

கதிரவனுக்கு தடை

வெளிஉலகுக்கு தடை

 

கதிரவன்  சுட்டெரிக்கிறானா இல்லை

மழை கொட்டி தீர்க்கிறதா?

என்று தெரியாமல்

அடைக்கப்பட்ட ஒரு அறை

 

எங்கோ பனிமலையில்

ஜஸ்கட்டியின் மீது

உட்கார்ந்து இருப்பது போல

அறைமுழுக்க குளிர் சாதன பெட்டியிம்

வசம்

 

வியர்வைக்கு கட்டுப்பாடு

விதிக்கப்பட்ட

அந்த அறைக்கு மட்டும்

எப்போதும் குளிர் காலம்.

 

எங்கோ மல்லிகையின்

வாசம் அந்த அறையில்

 

கன்னியின் கூந்தலில் இர்ருந்தோ

இல்லை

தாலிக்கொடி சூடிய மலர்கொடியாள்

கூந்தலில் இருந்தோ?

அந்த அறையை நிரப்பியது..

 

மயங்க வைக்கும் குளோரோபார்ம்

மருந்து மல்லிகை

சுவசத்திற்கு தடைவிதித்து

மூலைக்கு கிறுக்கு பிடிக்கவைக்கும்

வாசனை

 

உணர்சிகளை தூண்டிவிட்டு

மூலையின் செயல்பாட்டை

நிறுத்திவைக்கும் மல்லிகை

 

அதனால் தான் மங்கையருக்கு

மல்லிகை மேல்

தீராத காதலா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.