கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 58 - விதிவிலக்கா என்ன….!!!! - மீரா ராம்
அழகான இரவின் நிசப்தத்தில்
அமைதியின்றி தவித்தது மனம்…
பார்த்து பத்து நாள் மேல ஆச்சு…
நினைத்த மாத்திரமே மனமானது
கணம் கொண்டது அக்கணமே…
“ஆமா நீ கவலைப்பட்டுட்டே இரு…
வேற எதுவும் செஞ்சிடாத…”
உள்ளமானது குமுற ஆரம்பித்திட
“நான் என்ன செய்திட?...” என்ற
வார்த்தைகள் என்னிடமிருந்து வெளிப்பட்டது…
“இது ஒரு வார்த்தைன்னு இதையே சொல்லு…”
மீண்டும் மனமானது என்னுள் முரண்பட ஆரம்பித்திட
அதை சமாதானப்படுத்திடும் வழியே தெரியாது
வலியில் மூழ்கி போயிருந்தேன் நான்…
என்ன தான் வழி மேல் விழி வைத்து
நான் காத்திருந்த பொழுதும்
என் கண்களுக்கு கானல் நீராய் கூட
நீ தென்படாது போன மாயம் என்னடா கண்ணா?...
எப்பொழுதுமே உன்னை நான் தானே ரசித்திடுவேன்…
நீ தான் மருந்துக்கும் திரும்பி பார்த்திடமாட்டாயே…
ஹ்ம்ம்… தவறுதலாக சொல்லிவிட்டேனோ?...
நீ தான் ஓர் முறை கூட பார்த்ததே கிடையாதே…
பின்னே எங்கே என் பார்வைக்கு மறுபார்வையாய்
நீ திரும்பி பார்ப்பது நிகழ்ந்திடும்?...
எப்பொழுது தாண்டா உன் பார்வை எனும்
வட்டத்திற்குள் வந்திடுவேன் நான்?...
அந்நாளும் எப்பொழுதடா வரும்?...
காலமும் நீண்டு கொண்டே செல்லுகையில்
என் காத்திருப்பு மட்டும் விதிவிலக்கா என்ன?!!!...
பூ மலரும்…
{kunena_discuss:1088}