மாலை நேரத்து மயக்கம் - ஷக்தி
ஆதவனின் வன்மை
அடங்கும் வேளை..
செந்நிற கதிர்கள்
தாக்கிய செவ்வானம்
சித்தம் கலங்கி சிதையும் வேளை
கருநீல முகில்களின்
ஆரவாரத்தால் சட்டென
மாறும் வானிலையில்
வானவில் வர்ணங்களின்
அழகிய அணிவகுப்பில்
சில்லென்று சிரிக்கும்
மெல்லிய மழை சாரலில்
பிரகாசமாய் பிரசவிக்கும்
பால் நிலவின் சுவாசமான
பாரம்பரிய ஒளியில்
அந்த அந்தி
மாலை நேர மயக்கத்திலே
உன் கரம் பிடித்து ,
மடி சாய்ந்து
ஒவ்வொரு நொடியும்
உன் விழிகளின் சிறையில்
வாழும் வரம் வேண்டி
காத்திருக்கிறேன்...
என் உயிர் ஆதாரமே..!
{kunena_discuss:779}