தனிமையின் தாண்டவம் - ஷக்தி
கொடிய இருளினால்
உருவாக்கப்பட்ட அரங்கில்
கோர எண்ணங்களால்
மீட்டிய இசையில்
வரையறை இல்லா
கால நிலைகளிடையே
பரிமாறும் பயணங்களில்
ஆதி அந்தம் எல்லாம்
அகிம்சையாய் அடங்கி போக
கண் முன் தோன்றும்
அத்தனையும் கனவாக
தடம் பெயர
இமைக்கும் நொடிகளும்
இயல்பாய் இதிகாசங்கள் எழுத
நிலையற்ற நதியின்
மட்டங்களின் வேக வேறுபாட்டை
நிலைப்படுத்தும் உவமையில்
ஒளியின் விடியலை
இருளில் தேடும் விபரீதமாய்
தனிமையின் தாண்டவம் ...
{kunena_discuss:779}