நித்திரை நிகழ்வுகள் - ஷக்தி
கனவிலும் என் கனா கலைத்து
கருவறை இருள் காட்டி
அப்பொழுதும் கலங்கடித்து
ஏன் சென்றாய் எனைநீங்கி...!
இமைகள் விலக்கி
இடம் பொருள் உணர்ந்து
நினைவு திரும்பிய பொழுதில்
தெளிவில்லாமல் தவித்தேன்,
கனவெது நிஜமெது என..
தொலைந்த என்னை மீட்டெடுக்க எண்ணி
தொலைந்து போன என் நித்திரை நிகழ்வுகள்...
குழப்பத்தில் நான்,
நின் நினைவுகளின்
கொடிய பகைவனாய்...!
- என் ரணம்...
{kunena_discuss:779}