உயிர் உள்ளபோதே உரையாடுங்கள்! - புவனேஸ்வரி
நேரம் ஆகினால் என்ன ?
நெஞ்சினில் இருப்பதை பேசுங்கள் !
கடுமையாய் இருந்தால் என்ன ?
கடமையை மறக்காமல் பேசுங்கள் !
தூரம் அதிகரித்தால் என்ன ?
தூய்மை மாறாமல் பேசுங்கள் !
நெடுந்தூரம் நடந்தால் என்ன ?
நேசமாய் நின்று பேசுங்கள் !
சோகம் இருந்தால் என்ன ?
சுமைகளை பகிர்ந்தபடி பேசுங்கள் !
ஆத்திரம் வந்தால் என்ன ?
சாத்திரங்களை பேசுங்கள் !
கடமைகள் வந்தால் என்ன ?
கஞ்சத்தனம் இல்லாமல் பேசுங்கள் !
காவியம் தோன்றினால் என்ன ?
காதலுடன் பேசுங்கள் !
இடுக்கன் வந்தால் என்ன ?
நேர்மையாய் பேசுங்கள் !
தயக்கம் வந்தால் என்ன ?
தைரியமாய் பேசுங்கள் !
அஞ்சி நின்றால் என்ன ?
பஞ்சமின்றி பேசுங்கள்
செல்போனை போட்டு விட்டு
சுற்றத்தாருடன் பேசுங்கள் !
நகலை விட்டுவிட்டு
நலம் விரும்பிகளுடன் பேசுங்கள் !
பெருமைகளை ஒதுக்கிவிட்டு
பெற்றோருடன் பேசுங்கள் !
வினாடிகளில் ஓய்வு கிடைத்தால் கூட
விருந்தாளிகளுடன் பேசுங்கள் !
பண்புகள் கூடிடும்போது
பகைவனுடன் பேசுங்கள் !
மனம் திறந்து
மனைவியுடன் பேசுங்கள் !
காதலை தேக்கி வைத்து
கணவனுடன் பேசுங்கள் !
குழந்தைத்தனம் மாறாமல்
குழந்தைகளிடம் பேசுங்கள் !
மரியாதை குறையாமல்
முதியோருடன் பேசுங்கள் !
மொழிகளுக்கு பஞ்சமில்லை
மௌனம் களைந்து பேசுங்கள் !
நிரந்திரமில்லா வாழ்வில்
நிதானமாய் பேசுங்கள் !
பிணத்துடன் பேசினால் பித்தன் என்பர், எனவே
உயிர் உள்ளபோதே உரையாடுங்கள் !
{kunena_discuss:779}