இதிகாச நாயகிகள் - புவனேஸ்வரி
ராதையிடம் பிரிவினை பரிசளியுங்கள்
அவள் , ஊடலில் காதலை உருவாக்கி காட்டுவாள் !
மீராவின் பக்தியை சோதித்து பாருங்கள்
அவள் பக்தியையும் பரமனையும் இணைத்து காட்டுவாள் !
சீதையின் கற்புநிலையை விவாதித்து பேசுங்கள்
அவள் அக்கினியினால் பூமிக்கே பவித்ரம் வழங்குவாள் !
காந்தாரியின் மைந்தர்களை கொன்று குவியுங்கள்
அவள் தாய்மையின் வீரத்தை காட்டுவாள் !
பாஞ்சாலியை துகிளுரியுங்கள்
அவள் பெண்மையை தீயாக்கி ஆடை அணிவாள் !
இதிகாசத்தில் கண்டு கற்றிடுவோம்
துன்பத்தில் விழும் பெண்ணெல்லாம்
சக்தியின் மறு உருவாய் எழுந்திடுவாள் என்று !
{kunena_discuss:779}