(Reading time: 1 - 2 minutes)

இதிகாச நாயகிகள் - புவனேஸ்வரி 

Ithigasam

ராதையிடம் பிரிவினை பரிசளியுங்கள்

அவள் , ஊடலில் காதலை உருவாக்கி காட்டுவாள் !

 

மீராவின் பக்தியை சோதித்து பாருங்கள்

அவள் பக்தியையும் பரமனையும் இணைத்து காட்டுவாள் !

 

சீதையின் கற்புநிலையை விவாதித்து பேசுங்கள்

அவள்  அக்கினியினால் பூமிக்கே பவித்ரம் வழங்குவாள் !

 

காந்தாரியின் மைந்தர்களை கொன்று குவியுங்கள்

அவள் தாய்மையின் வீரத்தை காட்டுவாள் !

 

பாஞ்சாலியை துகிளுரியுங்கள்

அவள் பெண்மையை தீயாக்கி ஆடை அணிவாள் !

 

இதிகாசத்தில் கண்டு கற்றிடுவோம்

துன்பத்தில் விழும் பெண்ணெல்லாம்

சக்தியின் மறு உருவாய் எழுந்திடுவாள் என்று !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.