(Reading time: 1 - 2 minutes)

இசையின் வாக்குமூலம் - புவனேஸ்வரி 

 Music

இசை விரும்பிகளுக்கு,

இசையின் வாக்குமூலம்!

இயற்கையின் இணை நான்!

இயற்கைக்கு மட்டுமே துணை நான்!

என் ஆளுமையின் அனுக்கிரகம் பெற்றவன் இசையமைக்கிறான் !

அதில் இதயம் தொலைத்தவன் நீ, என்னில் நெகிழ்கிறாய் !

 

எதற்காக என்பால் உருகுகிறாய்?

உன் மனதை இதமாக்கிவிட்டால்,

உன் நண்பன் நான் என்கிறாய்!

உன்னை சிறகடித்து பறக்க வைத்தால்,

உன் காதல் நான் என்கிறாய்!

உன்னை உறங்க வைத்துவிட்டால்,

உன் தாய் நான் என்கிறாய்!

 

மாயையில் மூழ்கிடும் மானிடனே,

நீ ரசிப்பது என் சத்ததையல்ல!

என் மௌனத்தை !

ஆம்,

உன் கோபத்தைக் கண்டு நான் அழுவதில்லை!

உன் தோல்வியைக் கண்டு நான் ஏளனம் பேசுவதில்லை!

நீ விழுந்திடும்போது நான் கைத்தட்டி சிரிப்பதில்லை !

நீ எரிச்சலாய் உணரும்போது நான் கேள்விகள் கேட்பதில்லை!

 

சரியோ தப்போ,

உன்னை நான் ஆட்டுவிப்பது இல்லை!

உன் சுதந்திரம் என் கையில் இல்லை!ஆதலால்தான்

என்மீது காதலாய் இருக்கிறாய் நீ !

 

மானிடனே உண்மை உணர்வாய் !

உன் ஆதங்கத்தின் தீர்வு நானில்லை!

உன் தேடலின் முடிவு நானில்லை !

உன் கோழைத்தனத்தால் எனக்கு மாலை அணிவிக்காதே!

பிரச்சனைகளை சந்திக்காமல்

என்னை ரசிக்க சிந்திக்காதே !

சுகம் தரத் தெரிந்த எனக்கு

உன் சோகம் தீர்க்கத் தெரியாது !

உண்மையை உணர்ந்திடுவாய் !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.