மழையும் கடவுளும் - கிருஷ்ணபாபு
இடி இடித்து
மழைக்குதிரை கனைத்தது.
குழந்தைகள் விளையாண்ட
மண் கடவுள் பாவம்.,
கரைகிறார்..கரைந்தார்..மறைந்தார்
கடவுள் எங்கே?
கவலையில் தேடினேன்.
செய்த குழந்தைகளும்
பெய்த மழைத்துளிகளும்
குதித்து குதித்து விளையாண்டனர்.
சத்தத்தில் வான் அதிர்ந்தது.
ஒரு குழந்தை குதூகலமாய் கேட்டது.
'நீங்களும் வாங்களேன் விளையாட!'
ஓ!
இப்போதும் இவர்கள்
கடவுளோடே விளையாடுகின்றனர்!
சிரித்து எழுந்தேன் மனம்விட்டு.
இறுதிச்சொட்டு மழை
என் நெஞ்சில் விழுந்தது.
{kunena_discuss:779}