(Reading time: 14 - 27 minutes)

சிறுகதை - பெண் சிசு - நித்யஸ்ரீ

girl

தீபா ஒரு பிரபல மருத்துவ கல்லூரியில் தன் பட்டபடிப்பை முடித்து விட்டு இப்போது ஒரு அரசு மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வருகிறாள்.

அம்மா... அம்மா.. என்று அழைத்தபடி சமையகட்டிற்குள் நுழைந்தாள் தீபா. இன்னைக்கு என்ன டிபன்...?

பூரியும் உருளைகிழங்கும் பண்ணிருக்கேன்ம்மா.. போய் டைனிங் டேபிள்ல் உட்காரு நான் எடுத்துட்டு வரேன்.

அப்பா ஆபிஸ் போயாச்சாம்மா...?

ம்...ம்.. இன்னைக்கு ஏதோ முக்கியமான கான்பிரன்ஸ் இருக்காம் அதான் சீக்கிரமாவே போயிட்டாரு...

ம்... அம்மா அப்புறம் ஒரு முக்கியமான் விஷயம் "மக்கள் நல் வாழ்வு திட்டம்" அப்படின்னு ஒரு கேம்ப் அதுல முக்கியமா போதை பழக்கத்துக்கு அடிமையானவங்களயெல்லாம் திருத்தி அவங்களுக்கு ஒரு புது வாழ்க்கை முறை அமைத்து தரனும்ங்கிறது தான் அதோட நோக்கம்.அதுக்காக நாங்க கிராமப் புறத்துக்கு போய் அங்குள்ள மக்களுக்கு சில நல்லது செய்யல்லாம்னு இருக்கோம் அது மட்டுமில்லாம நாங்க போற அந்த உசிலம்பட்டிங்கிற கிராமத்துல இப்பவும் நிறைய பெண் சிசு கொலை நடக்கிறதா சொல்றாங்க, அது தப்புன்னும் அப்படி செஞ்சா அது சட்டபடி குற்றம்ன்னும் அங்குள்ள மக்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கனும் அம்மா. இந்த பெண் சிசு கொலையை எப்படியாவது தடுத்து நிறுத்தனும்....

அது வரையில் அமைதியாய் மகளின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அன்னபூரனி உசிலம்பட்டி கிராம் என்றதும் தன் விழியைஅகல விரித்து மகளைப் பார்த்தாள். எந்த கிராம் சொன்ன...?

உசிலம்பட்டி ம்மா ... அங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரவது இருக்காங்களா..?

ம்.... அதெல்லாம் ஒண்ணும்மில்லை சும்மாதான் கேட்டேன்.. சரி நீங்க எப்ப போறீங்க வர்ற எத்தனை நாள் ஆகும் ?

அநேகமா ஒன் மந்த் கேம் ஆக இருக்கும்னு நினைக்கிறேன். நாளைக்கே புறப்படறோம். வர்றதுக்கு ஒரு மாசமாகும்.

என்னடி இப்படி தீடிர்னு சொல்ற.. உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டாமா..?

அப்பாகிட்ட நேத்து சாயந்தரமே பேசி சம்மதமும் வாங்கிட்டேன்மா. அப்பாதான் அம்மாக்கு தெரிஞ்சா என்ன கொன்னுடுவா நீயே கேட்டுக்கோன்னு சொல்லிட்டாரும்மா.

அது சரி அப்பாவும் பொண்ணும் சேர்ந்து முடிவு பண்ணிட்டு இப்ப வந்து எங்கிட்ட இன்பார்ம் பண்றிங்களா...?

அய்யோ அப்படியெல்லாம் இல்லைம்மா யு ஆர் மை ஸ்வீட் மம்மி ... என்று சொல்லி தன் தாயை கட்டியனைத்து முத்தமிட்டாள் தீபா.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சிலம்பட்டி கிராம்.....

அது ஒரு அழகான கிராமம் திரும்பி பார்க்கும் இடமெல்லாம் எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் பசுமையாக நிறைந்திருந்தது. அங்குள்ள மக்களின் உழைப்பால் அந்த கிராம் மேலும் செழிப்பாய் காட்சியளித்தது. மாரியப்பனும் அவள் மனைவி கண்ணம்மா அந்த கிராமத்தில் தான் வசித்து வந்தார்கள். மாரியப்பன் அந்த கிராமத்திலேயே கூலி வேலை செய்து அதில் வந்த வருமானத்தில் தன் குடும்பத்தை நடத்தி வந்தான். குறைந்த வருமானமே என்றாலும் கூட இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் இன்னமும் குழந்தையில்லை. குழந்தை இல்லையே என்கிற ஏக்கமும் சிறிது இருக்கத்தான் செய்தது அவர்கள் இருவருக்கும்.

கண்ணமா கூட சும்மாயிராமல் அருகில் உள்ள கருவேலங்காட்டிற்கு சென்று சுள்ளி பொறுக்குவது என்று சிறு வேலைகள் செய்து வந்தாள். ஒரு நாள் கண்ணம்மா சுள்ளி பொறுக்கி கொண்டு வரும் வேளை, அது நண்பகல் வேளை என்பதால் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான்.அவளால் அதற்கு மேல் நடக்க முடிய வில்லை தலையை சுற்றி கொண்டு மயக்கமாய் வருவது போல் இருந்தது, கண்ணெல்லாம் இருட்டிக் கொண்டு பூமியே தலைகீழாய் தெரிவது போல் இருந்தது அவளுக்கு, துணைக்கு யாரையும் அழைப்பதற்கு கூட அவள் உடம்பில் தெம்பில்லாமல் போயிற்று. நா வறண்டு தொடையை அடைத்தது அப்படியே அங்கேயே சரிந்து விழுந்தாள். அவள் கூட வந்த பொன்னுதாயி பார்த்து விட்டு உடனே உதவிக்கு சில பெண்களை அழைத்து அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளுக்கு குடிக்க தண்ணீரும் குடுத்தனர். அதில் ஒரு முதியவள் கண்ணமாவின் கை பிடித்து பார்த்து விட்டு ம்…ம்… எல்லாம் நல்ல சேதி தான் தாயி ! நீ உண்டாயிருக்க என்று சொல்ல கண்ணமாவிற்கோ தான் சந்தோஷ படுவதா இல்லை வருத்த படுவதா என்று தெரியவில்லை.

என்னமா எம்புட்டு நல்ல சேதி சொல்லிருக்கேன் உம்முகத்தில் துளி கூட சந்தோஷத்தையே காணோமே ?

அதெல்லாம் ஒன்றுமில்லேம்மா....

சரி சரி... அடியே பொன்னுதாயி இவள பத்திரமா கூட்டிட்டு போயி அவ வீட்ல விட்டுடி. அவ புருஷன் கிட்ட சொல்லி அவள வைத்தியர் கிட்ட கூட்டிகிட்டு போகச் சொல்லுடி என்ன்ன சரியா ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.