(Reading time: 2 - 4 minutes)
சிறுகதை - பெண்ணின் மனசு!

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.

  

வேண்டியதைக் கேள் என்றான்.

  

அவள் கேட்டாள், "நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!”

  

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

  

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

  

அவள் சொன்னாள்,

  

"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன். ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் போது, கிழவியாக இருந்தால், வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.

  

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்

  

"இது உன் சம்பந்தப்பட்ட விஷயம். முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று,

  

அவள் சொன்னாள்,

  

"முடிவை என்னிடம் விட்டு விட்டதால், நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.

  

ஆம்! பெண், அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள்.

  

முடிவுகள், அவள் மீது திணிக்கப்படும் போது, சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். அனைவரும் புரிந்து செயல்படுங்கள் !.

-----------------------------  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.